இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.
blogger templatesBlogger Tips and TricksFetured Content Slider

செவ்வாய், 17 டிசம்பர், 2013

வெற்றி ஆண்களுக்கு மட்டுமல்ல - சாதித்துக் காட்டிய ஸ்ரீவித்யா பிரியா

வெற்றி ஆண்களுக்கு மட்டுமல்ல - சாதித்துக் காட்டிய ஸ்ரீவித்யா பிரியா

“எதுல இருந்து ஆரம்பிக்கட்டும்? கொஞ்சம் வித்தியாசமா என் கல்யாணத்துல இருந்து தொடங்கட்டுமா?” - கலகலப்புடன் கேட்கிறார் வித்யா. சென்னை, பாரீஸில் இருக்கும் அவருடைய அலுவலகத்தில் பரபரப்புகளுக்கு நடுவில் எதையுமே பொறுமையுடன்தான் அணுகுகிறார். குறுக்கீடுகளைக்கூட இன்முகத்துடன் எதிர்கொள்கிறார். சென்னை வர்த்தகக் கூட்டமைப்பு சார்பில் கவர்னர் கையால் வாங்கிய விருதுகள் மேஜைக்குப் பின்னால் இருக்க, தன் முன்னால் இருக்கும் சவால்கள் குறித்துப் பேசுகிறார் வித்யா.
“எங்களோடது பெற்றோர் சம்மதிக்காத காதல் திருமணம். என் கணவர் பாலச்சந்திரன், டிரான்ஸ்போர்ட் பிசினஸ்ல இருக்கார். அவர் வீட்ல சம்மதம் கிடைச்சாலும், என் வீட்டில் ஏத்துக்கவே இல்லை. நாங்க பரம்பரை பணக்காரர்கள் கிடையாது. கணவரோட வருமானம் போதவில்லை. காலேஜ்ல நான் படிச்ச பொருளாதாரமும், வாங்கின கோல்டு மெடலும் வாழ்க்கையில எந்த மாற்றத்தையும் பண்ணலை. படிச்சதுக்குக் கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த ஷிப்பிங் கம்பெனியில வேலைக்குப் போனேன். பெரிய பதவி எல்லாம் இல்லை. சாதாரண வேலைதான். கொடுத்த வேலையை, நிறைவா செய்தேன். மூத்த மகன் பிறந்தான். அவனைப் பார்த்தாலாவது எங்க வீட்டோட கோபம் தீரும்னு என் பிறந்த வீட்டுக்குப் போனேன். கைக்குழந்தையோட வாசல்ல நின்ன என்னைப் பார்த்து, ‘நாங்க இன்னும் இருக்கோமா, செத்துட்டோமான்னு பார்க்க வந்தியா’ன்னு கேட்டாங்க. ஏற்கனவே உடைஞ்சு போயிருந்த என்னை மொத்தமா நொறுக்கிப்போட அந்த வார்த்தைகளே போதுமானதா இருந்தது. சரி, எல்லாத்துக்கும் இன்னொரு பக்கம் இருக்கும் இல்லையா? அவங்க நிலையில நின்னுப் பார்த்தா அவங்க அப்படி நடந்துக்கறதும் சரிதானே” என்று பெற்றவர்களை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார் வித்யா.
வீட்டின் வறுமையை எப்பாடுபட்டாவது சமாளித்தாக வேண்டும் என்ற உத்வேகம்தான் அவரை ஒரு நிறுவனத்தின் முதலாளியாக உயர வைத்திருக்கிறது.
“ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட வீட்டுல 400 ரூபாய் வாடகைக்குக் குடியிருந்தோம். வீட்டுச் செலவு, குழந்தைங்க படிப்புன்னு செலவு மட்டும் அதிகமா இருக்கும். வரவுக்கு எங்கே போறது? என் கணவர் வேலை பார்த்த நிறுவனம் நஷ்டத்துல இயங்கினதால அதை மூடிட்டாங்க. என்ன செய்யறதுன்னே தெரியலை.
“நான் செய்துகிட்டு இருந்த வேலையை விட்டுட்டு சொந்தமா தொழில் தொடங்கலாம்னு முடிவு செய்தேன். என்னோட வேலை பார்த்த நாலு பேர், பங்குதாரர்களா சேர்ந்தாங்க. முதல் போட என்கிட்டே பணம் இல்லாததால ஆரம்பத்துல நான் வொர்க்கிங் பார்ட்னராதான் சேர்ந்தேன். எங்களுக்குத் தெரிஞ்சது லாஜிஸ்டிக்ஸ்தானே. அந்தத் தொழிலையே தொடங்கினோம். தொழில் இடத்துல பிரச்சினைகள் சகஜம்தானே. அதனால பங்குதாரர்கள் விலகிட்டாங்க. நானும் இன்னொருத்தரும் மட்டும் தொழிலைத் தொடர்ந்து நடத்தினோம். கடைசியில அவங்களும் விலகிட, நான் தனியாளா நின்னேன்” என்று சொல்கிற வித்யாவுக்கு அதற்கடுத்து ஏறுமுகம்தான்.
சவால்களைச் சமாளித்தேன்
“கப்பல், விமானம் போன்றவற்றில் வரும் சரக்குகளை உரியவரிடம் சேர்ப்பதுதான் எங்கள் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் வேலை. பொதுவா பரம்பரையா இந்தத் துறையில இருக்கறவங்கதான் இங்கே அதிகம். அவங்களுக்குத்தான் நிறைய வாடிக்கையாளர்கள் இருப்பாங்க. ஏன்னா அதிகமான பணம் புழங்கற, அதே சமயம் ரிஸ்க் நிறைந்த தொழிலும்கூட. நான் என்னோட கம்பெனிக்கு ஆர்டர் பிடிக்க எத்தனையோ கம்பெனிகள் ஏறி, இறங்கியிருக்கேன். என்னை நம்பி ஆர்டர் தர பலர் யோசிச்சாங்க. ஆனா சிலர் வாய்ப்பு தரவும் செய்தாங்க. அதைத் தடுக்க எத்தனை போட்டி தெரியுமா? நிறைய இடையூறுகள், தொந்தரவுகள். சமயங்கள்ல முக்கியமான டாக்குமெண்ட்ஸ் காணாமல் போயிடும்.
ஆண்கள் மட்டுமே நிலைச்சிருக்கும் இந்தத் துறையில என்னோட வரவை அத்தனை சீக்கிரம் யாருமே ஏத்துக்கலை. சிலர் என்னோட நடத்தையைக்கூட கேள்விக்குள்ளாக்கினாங்க. நான் உடைஞ்சுபோய் இந்தத் துறையில இருந்து விலகணும்கறதுதான் அவங்க நோக்கம். அப்படி நான் பின்வாங்கிட்டா, அவங்க ஜெயிச்சா மாதிரி ஆகிடுமே. எதைப் பத்தியுமே கவலைப்படாம என் கொள்கையில உறுதியா நின்னேன். இப்போ ஐ.டி.சி. மாதிரியான பெரிய பெரிய நிறுவனங்கள் என் வாடிக்கையாளரா இருக்கறது எனக்குப் பெருமையா இருக்கு” என்று சொல்லும்போதும் அவரது வார்த்தைகளிலோ, முகத்திலோ பெருமிதத்தின் சுவடு துளிக்கூட இல்லை.
வெற்றி ரகசியம்
“கிட்டத்தட்ட ஆயிரம் பேருக்கு மேல இருக்கற எங்கள் துறையில் நான் மூன்றாவது இடத்துல இருக்கறதா சேம்பர் ஆஃப் காமர்ஸ்ல இருந்து போன் வந்தப்போ நான் நம்பவே இல்லை. பரிசு வாங்கின அந்த நொடி எனக்கு இன்னும் சாதிக்கணும்கற உத்வேகத்தைக் கொடுத்துச்சு. குரூப் போட்டோவுக்கு நின்னப்போ அந்த குழுவில் நான் மட்டும்தான் பெண் என்பது தெரிஞ்சது. அது என் தன்னம்பிக்கையை அதிகரிச்சது. இப்போ ‘வீ வின் லாஜிஸ்டிக்ஸ்’னு இன்னொரு கம்பெனி துவங்கியிருக்கோம். நானும் என் பணியாளர்களும் அதுக்கான வேலைகளில் மும்மரமா இருக்கோம். காரணம் அவங்க பங்களிப்பு இல்லாம இந்த வெற்றி சாத்தியம் இல்லை” என்று தன் ஊழியர்களை உயர்த்திப் பேசுகிறார் வித்யா. தோல்வியில் துவளாத, வெற்றியில் துள்ளாத இந்த மனநிலைதான் வித்யாவின் வெற்றி ரகசியம்!

வெற்றி தந்த வெயிலுக்கு நன்றி

வெற்றி தந்த வெயிலுக்கு நன்றி


வேலூரின் சிறப்புகளில் ஒன்று என்னத் தெரியுமா? வருடத்தின் ஒன்பது மாதங்களும் வெயில் வாட்டியெடுக்கும். அந்த வெயிலையே தன் தொழிலுக்கான அச்சாணியாகப் பயன்படுத்தியிருக்கிறார் வேலூரைச் சேர்ந்த லாவண்யா பாலாஜி. தாகத்துக்குத் தண்ணீரைவிட குளிர்பானங்களையே இன்று பலர் நாடுகிறார்கள். மக்களின் அந்த மனநிலைதான் இவரைக் குளிர்பானத் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கத் தூண்டியிருக்கிறது. இவர்களது நிறுவனத் தயாரிப்பில் உருவான குளிர்பானங்கள், இன்று நகரின் முக்கியக் கடைகளில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. கல்லூரி பேராசிரியராக இருந்தவர், தொழில்முனைவோராக மாறியதற்குப் பின்னால் குடும்பமும், தன்முனைப்பும் இருப்பதாகச் சொல்கிறார்.
“திருமணத்துக்குப் பிறகு நான் சென்னையில்தான் இருந்தேன். அப்போது கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தேன். என் கணவருக்கு மென்பொருள் நிறுவனத்தில் வேலை. அவருக்கு வேலூருக்குப் பணிமாறுதல் கிடைத்ததால் குடும்பத்துடன் இங்கே வந்துவிட்டோம். பொதுவாக வேலூரின் வெயிலைக் கண்டு பலரும் பயப்படுவார்கள். எங்களுக்கு என்னவோ அதிகமான வெயிலும், குளிரும் பிடித்துவிட்டது. அதனால் இங்கேயே நிரந்தரமாகக் குடியேறினோம். இங்கேயும் கல்லூரி பணி தொடர்ந்தது. என் இரண்டாவது குழந்தை பிறந்தபோது பணியைத் தொடரமுடியாமல் போனது” என்று முன்கதை சுருக்கம் சொல்கிறார் லாவண்யா.
கைகொடுத்த தொழில் மையம்
குழந்தை ஓரளவுக்கு வளர்ந்தாலும் தொடர்ந்து வேலைக்குச் செல்ல முடியாத சூழல். அதற்காக வீட்டை மட்டும் நிர்வகிப்பதோடு தன் எல்லையைச் சுருக்கிக்கொள்ள விரும்பவில்லை லாவண்யா. தன் திறமையை நிரூபிக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். தன் நினைப்பைப் பலரிடமும் கேள்வியாகக் கேட்டிருக்கிறார். அப்போது லாவண்யாவின் மாமனார்தான், தொழில்தொடங்கச் சொல்லி உற்சாகம் அளித்திருக்கிறார்.
“என் மாமனார் வீட்டில், சிறு அளவில் குளிர்பானங்கள் தயாரித்து விற்பனை செய்தார்கள். அதையே நான் பெரிய அளவில் செய்யலாம் என்று நினைத்தேன். என் கணவரும், மாமனாரும் எனக்குத் துணை நிற்க, தொழில் தொடங்குவது என்று முடிவெடுத்தேன். குளிர்பானத் தயாரிப்பு நிறுவனம் தொடங்க லட்சக் கணக்கில் பணம் வேண்டுமே. என்னச் செய்வது என்று யோசித்தபோது, மாவட்டத் தொழில் மையம் எங்களுக்குக் கைகொடுத்து உதவியது. மாவட்டத் தொழில் மையத்தை அணுகியபோது, பட்டதாரிகளுக்கு என்னவிதமான கடனுதவித் திட்டங்கள் இருக்கின்றன என்று சொன்னார்கள். முதல்கட்டமாக மாவட்டக் கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் சந்திப்பு இருக்கும் என்று சொன்னார்கள். அதன்படி நான் கலெக்டரையும், அதிகாரிகளையும் சந்தித்து ஒப்புதல் வாங்கினேன். அதன் பிறகு ஒரு மாதம் பயிற்சி எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அந்தப் பயிற்சி, என் ஆர்வத்துக்கு உரமிட்டது” என்கிறார் லாவண்யா.
லாவண்யா, படம் : வி.எம்.மணிநாதன்
வழிகாட்டிய தொழில்முனைவோர்கள்
ஒரு மாதம் நடந்த பயிற்சியில் பலதுறை நிபுணர்களும் பங்கேற்றுப் பேசியிருக்கிறார்கள். தொழில்தொடங்கி வெற்றி பெற்றவர்களுடன் கலந்துரையாடலும் நடந்திருக்கிறது. அதுதான், ‘என்னால் முடியுமா?’ என்ற லாவண்யாவின் தயக்கத்தைத் தகர்த்திருக்கிறது. கடனுதவி கிடைப்பதற்கு முன்னரே தொழிற்சாலை தொடங்குவதற்கான இடம், பணியாளர்கள், விற்பனை என்று சகலத்தையும் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து திட்டமிட்டிருக்கிறார் லாவண்யா. குளிர்பானத் தயாரிப்பு ஃபார்முலாக்களில் இவருடைய மாமனாரின் பங்கு அதிகம் இருந்ததாகச் சொல்கிறார்.
வரவேற்ற வாடிக்கையாளர்கள்
“உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனக் குளிர்பானங்களுக்கு மத்தியில் எங்கள் தயாரிப்பு செல்லுபடியாக வேண்டும் என்றால் அது மிகப்பெரும் சவால்தானே? தரத்திலும் சுவையிலும் புதுமையைக் கூட்டினால்தான் அது சாத்தியமாகும் என்று புரிந்தது. குளிர்பானங்கள் இயற்கை மணத்துடனும் சுவையுடனும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். நம் மண்ணின் பானமான சோடா கலர் சுவையுடன் அது பொருந்திப் போகிற மாதிரியும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.
உண்ணும் பொருள் என்பதாலேயே எதையுமே இரு மடங்கு பரிசோதனைக்குப் பிறகுதான் செயல்படுத்தினோம். என் மாமனாரின் தொழில்நுட்ப அறிவுடன் என் கணவரின் மார்க்கெட்டிங் அறிவும் எனக்குப் பக்கப் பலமாக இருந்தன” என்று சொல்கிற லாவண்யா, நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ள, அவருடைய கணவர் பாலாஜி ராஜா, வர்த்தகத்தைக் கவனித்துக் கொள்கிறார். ஆரம்பத்தில் கடைகளை அணுகுவதே சிரமமாக இருந்தது என்கிறார் லாவண்யா.
“புதுத் தயாரிப்பு என்பதாலேயே பல கடைகளில் எங்கள் குளிர்பானங்களை வாங்க யோசித்தார்கள். ஆனால் ஒருமுறை வாங்கிய வாடிக்கையாளர்கள், அடுத்தமுறையும் கேட்கத் தொடங்கியதால் எங்களுக்கு அதிகமாக ஆர்டர் வந்தது. இன்று ஆற்காடு முதல் குடியாத்தம் வரை கிட்டத்தட்ட இரண்டாயிரம் கடைகளுக்கு எங்கள் குளிர்பானங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
வேலூர் நகரின் முக்கியக் கடையில்தான் நான் மாதா மாதம் மளிகைப்பொருள்கள் வாங்குவேன். அங்கே வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு மத்தியில் எங்கள் தயாரிப்பைப் பலர் விரும்பி கேட்டு வாங்கிச் செல்வதைப் பார்க்கும்போது பெருமிதமாக இருக்கும். இதுபோன்ற வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக ஒவ்வொரு நாளும் திட்டமிட்டு உழைக்கிறோம், நிச்சயம் வெற்றியும் பெறுவோம்” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் லாவண்யா.

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

KVIC விவசாய லோன்கள்

KVIC விவசாய லோன்கள்

KVIC அமைப்பு  கிராமபுற வேலை வாய்ப்புகளை  அதிகபடுத்த  மற்றும்  சிறு தொழில் செய்வோரை மேலும்  மேலும் ஊக்குவிக்க பல்வேறு விதமான கடன்களை வழங்குகிறது.அதிகபட்சமாக 30% மானியத்துடன் 25 லட்சம் வரை கடன் பெற இயலும்.ஆனால் செய்யப்படும் தொழில்கள் KVIC அங்கிகாரம் பெற்ற தொழில்களாக இருக்க வேண்டும். நீங்கள்  செய்கிற தொழில் கிழே கொடுக்கபட்டுள்ள அட்டவணையில் உள்ள ஒன்றாக இருக்க வேண்டும்.
விவசாயம் சார்ந்த தொழில்கள்
——————————————–
தேனீ வளர்த்தல்,கத்தாழை வளர்த்தல்,பசை, பிசின் தயாரித்தல்,அரக்குத் தயாரித்தல்,மூங்கில் கூடை செய்தல்,விளக்குமாறு, வெட்டிவேர் தட்டி செய்தல்,வன விளை பொருட்கள் சேகரித்தல், பதனிடுதல்,போட்டோ பிரேம்
நெட்டி வேலை. நெட்டி மாலைகள் செய்தல்,இலையினால் செய்யப்படும் கிண்ணங்கள்,வனத்திலிருந்து கிடைக்கும் மூலிகைச்செடிகள் சேகரித்தல்
தாதுப் பொருள்கள் சார்புத் தொழில்கள் பற்றிய அட்டவணை
—————————————————————————————————————
1. மண்பாண்டம் தயாரித்தல்
2. கிளிஞ்சல் மற்றும் சுண்ணாம்பு
3. கல்வெட்டுதல், ஜல்லி அரைத்தல், செதுக்குதல் (கட்டிடம் மற்றும் கோயிலுக்கு)
4. கல்லில் செய்யப்படும் பயன்பாட்டுப் பொருட்கள்
5. சிலேட்டு மற்றும் சிலேட்டுப் பென்சில் செய்தல்
6. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் தயாரித்தல்
7. பாத்திரம் கழுவும் பவுடர்
8. எரி பொருளாகப் பயன்படும் கரி
9, தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த செயற்கை கற்களால் செய்யப்படும் ஆபரணங்கள்
10.  கோலப்பொடி
11. வளையல்
12. பெயிண்ட், வார்னிஷ், டிஸ்டம்பர் மற்றும் கலர் பொடிகள்
13. கண்ணாடிப் பொம்மைகள்
14. கண்ணாடி அலங்காரத் தொழில்
15. செயற்கை வைரம் கட்டிங்
வனம் சார்ந்த தொழில்கள்
16. தேனீ வளர்த்தல்
17. கத்தாழை வளர்த்தல்
18. பசை, பிசின் தயாரித்தல்
19. அரக்குத் தயாரித்தல்
20. மூங்கில் கூடை செய்தல்,
21. விளக்குமாறு, வெட்டிவேர் தட்டி செய்தல்
22. வன விளை பொருட்கள் சேகரித்தல், பதனிடுதல்
23. போட்டோ பிரேம்
24. நெட்டி வேலை. நெட்டி மாலைகள் செய்தல்
25. இலையினால் செய்யப்படும் கிண்ணங்கள்
26. வனத்திலிருந்து கிடைக்கும் மூலிகைச்செடிகள் சேகரித்தல்
கையால் செய்த  காகிதம் மற்றும் ார்ப்பொருட்கள்
27. கைக்காகிதம்
28. காகிதத்தினால் செய்யப்படும் தட்டு, கிண்ணம் பை மற்றும் அட்டை பெட்டிகள்
29. புத்தக பைண்டிங் கவர், நோட்புக் செய்தல்
30. சணற் பொருட்கள் (நூல் தவிர)
31. கயிறு மற்றும் நார்பொருட்கள்
வேளாண் சார்ந்த உணவுப் பொருட்கள் / சார்புத் தொழில்கள் 
32. அரிசி, பருப்பு மற்றும் தானியங்கள் பதனிடுதல் / மசாலா பவுடர் / அப்பளம் / ரொட்டி பேக்கரி பொருட்கள் செய்தல்
33. இடியாப்பம்
34. சமையல் எண்ணெய் தயாரித்தல்
35. கோதுமை, ரவை தயாரித்தல்
36. சிறிய ரைஸ் மில்
37. பனை பொருட்கள் / பனை வெல்லம்
38. கரும்பு வெல்லம் / கண்டசாரி சர்க்கரை செய்தல்
39. மிட்டாய், தின்பண்டம் தயாரித்தல்
40.  கரும்புச்சாறு செய்தல்
41. கேழ்வரகு, மக்காச்சோளப் பொருட்கள் தயாரித்தல்
42. முந்திரிப்பருப்பு தயாரித்தல்
43. பால்பொருட்கள் தயாரித்தல்
44. மாட்டுத் தீவனம் / கோழித் தீவனம் தயாரித்தல்
பாலிமர் மற்றும் ரசாயண சார்புத் தொழில்கள்
45. தீப்பெட்டி
46. அகர்பத்தி
47. பட்டாசு
48. தோல் பதனிடுதல்
49. சோப்பு தயாரித்தல்
50. ரப்பர் பொருட்கள்
51. ரெக்ஸின்
52. பி.வி.சி. பொருட்கள்
53. கொம்பு, எலும்பு, தந்தப் பொருட்கள்
54. மெழுகுவர்த்தி, சூடம் மற்றும் அரக்கு
55. பிளாஸ்டிக் பொருட்கள்
56. பொட்டு தயாரித்தல்
57. மருதாணி தயாரித்தல்
58. வாசனைத் தைலம் தயாரித்தல்
59. ஷாம்பு தயாரித்தல்
60. ஹேர் ஆயில்
61. டிடர்ஜெண்ட், சலவை பவுடர்
பொறியியல் மற்றும் மரபு சார எரிசக்தி
62. தச்சுவேலை
63. இரும்பு வேலை
64. அலுமினியப் பாத்திரங்கள்
65. சாண எரிவாயு
66. கழிவுப் பொருட்கள் மூலம் இயற்கை உரம் உற்பத்தி செய்தல்
67. பேப்பர் பின், ஸ்டவ் பின், ஊக்கு, கிளிப்புகள் தயாரித்தல்
68. அலங்கார பல்புகள், கண்ணாடிக்குடுவைகள் மற்றும் கண்ணாடி
69. குடை தயாரித்தல்
70. சூரிய ஒளி மற்றும் காற்றினால் இயங்கும் கருவிகள்
71. பித்தளைப் பாத்திரங்கள்
74. பாத்திரம் இல்லாத பித்தளை, செம்பு, வெண்கலப் பொருட்கள்
75. ரேடியோ
76. கேஸட் பிளேயர் ரேடியோவுடன்/ரேடியோ இல்லாமல்
77. வோல்டேஜ் ஸ்டெபிலைசர்
78. எலக்ட்ரானிக் கடிகாரம் மற்றும் அலாரம் கடிகாரம்
79. கேஸட் ரெக்கார்டர் ரேடியோவுடன்/ரேடியோ இல்லாமல்
80. மரத்தினால் செய்யப்படும் அழகுப் பொருட்கள்
81. தகரப் பொருட்கள்
82. வயர் நெட்
83. இரும்பு கிரில்
84. மோட்டார் வைண்டிங்
85. வண்டி, மாட்டு வண்டி, சிறிய படகுகள் தயாரித்தல், சைக்கிள், சைக்கிள் ரிக்ஷா, மோட்டார் பொருத்தப்பட்ட வண்டிகள் அசெம்பிளிங்
86. இசைக்கருவிகள் தயாரித்தல்
ஜவுளி தொழில் (கதர் நீங்கலாக) மற்றும் பிற தொழில்கள்
87. பாலிவஸ்திரா
88. லோக்வஸ்திரா
89. பனியன்
90. ரெடிமேட் துணிகள் தயாரித்தல் / டெய்லரிங்
91. பொம்மை தயாரித்தல்
92. சாயம் / சாய அச்சுத் தொழில்
93. கம்பளி மற்றும் நூல்கண்டுகள்
94. எம்பிராய்டரி
95. மருத்துவத் துறைக்கானபேண்டேஜ்கள்
96. ஸ்டவ் திரிகள்
97. எம்பிராய்டரி செய்யப்பட்ட துணிகள்
98. லாண்டரி /  சலவையகம்
99. பார்பர் / முடித்திருத்தகம்
100. பிளம்பிங்
101. வீட்டில் பயன்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதுபார்த்தல்
102. டயர் வல்கனை சிங்
103. பம்ப்செட், டீசல் எஞ்சின் பழுதுபார்த்தல்
104. விவசாயப் பொருட்களுக்கான ஸ்பிரேயர், பூச்சி மருந்து பம்ப்செட்டுகள் பழுதுபார்த்தல்
105. ஒலி, ஒளி அமைப்புகளுக்கான ஒலி பெருக்கி, ஆம்பிளிபையர், மைக் போன்றவை வாடகைக்கு விடுதல்
106. பேட்டரி சார்ஜ் செய்தல்
107. பேனர் / கலைத்தட்டிகள் வரைதல்
108. சைக்கிள் ரிப்பேர் கடை
109. கட்டிட வேலைகள்
110 பேண்ட் வாசிக்கும் குரூப்கள்
111. மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகள் (பைபர் கிளாஸ்)
112. வாடகைக்கு விடப்படும் மோட்டார் சைக்கிள்
113. இசைக்கருவிகள்
114 உணவகம் (மதுபானம் நீங்கலாக)
115. தேனீர் விடுதி
116. அயோடின் கலந்த உப்பு

திங்கள், 7 அக்டோபர், 2013

நோட்டுப் புத்தகம் தயாரிப்பு


நோட்டுப் புத்தகத்தின் தேவை என்ன என்பதைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பள்ளி, கல்லூரிகள் அலுவலகங்கள், வீடுகள் என எல்லா இடங்களிலும் இதற்கான தேவை இருந்துகொண்டே இருக்கிறது. சாகாவரம் பெற்ற இந்தத் தொழிலைப் பற்றிதான் இந்த வாரம் நாம் பார்க்கப் போகிறோம்...
ம்ப்யூட்டர், லேப்டாப் என தொழில்நுட்பம் பெரிதாக வளர்ந்துவிட்டாலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இன்றும் நோட்டுப் புத்தகங் களில்தான் எழுதி வருகின்றனர். எனவே, எல்.கே.ஜி. முதல் கல்லூரி வரை நோட்டுப் புத்தகங்களுக்கான தேவை இருந்து கொண்டே இருக்கிறது. குழந்தைகளுக்குப் பாடங்கள் அதிகமாக ஆக, நோட்டு களுக்கான தேவையும் எதிர்காலத்தில் இருந்து கொண்டே இருக்கும். பள்ளி, கல்லூரிகளை நேரடியாக அணுகி, ஆர்டர் பெறுவதன் மூலம் நோட்டுக்களை விற்கலாம். அல்லது உரிய டீலர் மூலம் கடைகளில் சப்ளை செய்துவிடலாம். நோட்டு தயாரிப்பின்போது மீதமாகும் கட்டிங் வேஸ்டுகளை மறுசுழற்சி முறையில் இரண்டாம் தர நோட்டுகளைத் தயார் செய்பவர்களுக்கு விற்பனை செய்யலாம்.
நிலம் மற்றும் கட்டடம்!
இந்தத் தொழில் தொடங்க 1,000 முதல் 1,500 சதுர அடி வரை இடம் தேவை. இதில், குறைந்தது 750 சதுர அடி அளவில் கட்டடம் இருக்க வேண்டும்.
மூலப் பொருள்!
நோட்டுப் புத்தகம் தயாரிக்கத் தேவைப்படும் பேப்பர் சுருள் வடிவிலும், பெரிய ஷீட் வடிவிலும் கிடைக்கிறது. கிலோ கணக்கில் கிடைக்கும் இந்த மூலப் பொருளின் விலை கல்வி ஆண்டின் ஆரம்ப காலத்தில் அதிகமாகவும், பின்னர் ஆறு மாதம் குறைவாகவும் இருக்கும். பொதுவாக கிலோ 52-55 ரூபாய் வரையில் கிடைக்கிறது. இந்த மூலப் பொருட்கள் டி.என்.பி.எல்., எஸ்.பி.பி. போன்ற கம்பெனிகளிடம் கிடைக்கிறது.

இயந்திரம்!  
மூலப் பொருள் தொடங்கி நோட்டுக்களாக மாறுகிற வரை மொத்தம் ஐந்து இயந்திரங்கள் தேவை. ரூலிங் மெஷின், பைண்டிங்க் மெஷின், கட்டிங் மெஷின், பின்னிங் மெஷின் மற்றும் பிரின்டிங் மெஷின் என்கிற இந்த ஐந்து இயந்திரங்களை வாங்க மொத்தம் 14 லட்சம் ரூபாய் வேண்டும். இதில், முதல் நான்கு இயந்திரங்களும் கேரளா மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் கிடைக்கின்றன. பிரின்டிங் இயந்திரம் இங்கு கிடைத்தாலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது நல்லது. இந்த பிரின்டிங் மெஷினை தேவைப்பட்டால் மட்டுமே வாங்கிக் கொள்ளலாம். அட்டையில் படங்களையும் எழுத்துக்களையும் பிரின்ட் செய்வதற்காகவே இந்த மெஷின். ஏற்கெனவே பிரின்ட் செய்யப்பட்ட அட்டைகள் சந்தையில் கிடைப்பதால், அதை வாங்கி, நோட்டுடன் பைண்ட் செய்து தந்துவிடலாம். தவிர, இந்த மெஷினின் விலையும் அதிகம். பிரின்டிங் இயந்திரத்துடன் சேர்த்து இந்தத் தொழில் தொடங்குவதற்கு இருபது லட்ச ரூபாய்க்கு மேல் தேவைப்படும்.
தயாரிப்பு முறை!
நோட்டுப் புத்தகங்கள் இரண்டு வகையாகத் தயாரிக்கப்படுகிறது. 40-90 பக்கம் கொண்ட நோட்டு புத்தகம் ஒரு வகை. 192-400 வரையிலான பக்கங்களைக் கொண்ட நோட்டுப் புத்தகம் மற்றொரு வகை. இந்த இரண்டு வகையைப் பொறுத்தே தயாரிப்பு வேலைகள் மாறும்.
ரூலிங் மெஷின்!
இந்த மெஷினில் பேப்பரை வைத்து நமது தேவைக்கேற்ப நோட்டுப் புத்தகத்தில் வரிகளைப் போட பயன்படு கிறது. இந்த மெஷின் முதலில் மார்ஜின் லைனும், பின்னர் தேவையான வரிகளையும் போடுகிறது. இந்த வேலை செய்ய இரண்டு ஆட்கள் தேவைப்படுவார்கள். இப்படி வரிகளுடன் அச்சாகி வரும் பேப்பர்கள் எண்ணப்பட்டு தனியாக வைக்கப்படும். அன்ரூல்டு நோட்புக்கை மட்டுமே தயாரிப்பவர்களுக்கு இந்த மெஷின் தேவையிருக்காது.  

கட்டிங் மெஷின்!
எண்ணப்பட்ட பேப்பர்கள் தேவைப்படும் அளவுக்கு ஏற்ப வெட்டப்படுகிறது. சின்ன நோட்டு, பெரிய நோட்டு என்று தேவைப்படும் அளவுகளில் வெட்டிக் கொள்ளலாம். இந்த வேலையினைச் செய்ய இரண்டு ஆட்கள் தேவை.
பின்னிங் மெஷின்!
வெட்டப்பட்ட பக்கங்கள் பின்னிங் மெஷின் மூலம் பின் அடிக்கப்படுகிறது. இந்த வேலையைச் செய்ய மூன்று பேர் தேவைப்படுவார்கள். பின் அடிக்கப்பட்ட நோட்டுகள் கட்டிங் மெஷின் மூலம் வெட்டுகிறார்கள்.
பைண்டிங் மெஷின்!
இப்படி வெட்டப்பட்டு வருகிற பெரிய நோட்டுகளில் வெளிப்பக்கமாக அட்டை வைத்து 300 செல்சியஸ் அளவுக்கு சூடாக்கப்பட்ட பசையை (நிuனீ) கொண்டு ஒட்டுகிறார்கள். இந்த வேலையைச் செய்ய மூன்று பேர் தேவை. பின்னர் மீண்டும் கட்டிங் மெஷினில் வைத்து பிசிறில்லாமல் சீராக வெட்டி சரி செய்கிறார்கள்.  

பிரின்டிங் மெஷின்!
இந்த மெஷின் மூலம்தான் நோட்டின் அட்டைகள் பிரின்ட் செய்யப்படுகிறது. இந்த மெஷினைக் கொண்டு முகப்பு அட்டையில் வேண்டிய டிசைன் அல்லது படங்களை பிரின்ட் செய்து கொள்ளலாம். இந்த மெஷினை புத்தகங்களை அச்சடிக்கவும், வேறு பல பிரின்டிங் வேலை செய்யவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மைனஸ் :
இந்தத் தொழிலைப் பொறுத்தவரை மே மாதம் தொடங்கி ஆறு மாதம் வேலை இருக்கும். அடுத்துவரும் சில மாதங்களுக்குப் பெரிதாக வேலை இருக்காது. இதுதான் இந்தத் தொழிலில் இருக்கும் பாதகம். தவிர, தொழில் நன்றாக இருக்கும்போது மூலப் பொருளின் விலை உச்சத்தில் இருக்கும் என்பதும் பாதகமான விஷயமே.
பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதால், தயாரித்த நோட்டுக்கள் விற்க முடியாத நிலை நிச்சயம் உருவாகாது. எனவே, புதுப்புது யுக்திகளைப் பயன்படுத்தி குழந்தைகளை ஈர்த்தால் இந்தத் தொழிலில் நிச்சயம் வெற்றிதான்!    
- பானுமதி அருணாசலம், அ.முகமது சுலைமான்.
படங்கள் : ச.இரா. ஸ்ரீதர்

லக வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பூமிப்பந்தில் வியாபாரம் மிகப் பிரம்மாண்டமாக வளர்ச்சியடைந்து வருகிறது.
எந்தப் பொருளையும், எந்தப் பகுதிக்கும் காலதாமதமின்றி எடுத்துச் செல்வதற்காக வளரும் நாடுகள் கட்டுமானத் துறையில் (Infrastructure) அதிகம் முதலீடு செய்து புதிய விமான நிலையங்கள், பெரிய துறைமுகங்கள், நான்கு வழிச் சாலைகள், புதிய இரயில் பாதைகள் போன்ற உலகை இணைக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடை பெற்று வருகின்றன. அதே போல மிகப் பிரம்மாண்டமான கப்பல்களும், விமானங்களும் இரண்டு அடுக்கு இரயில் பெட்டிகளும் அதிகப் பொருட்களைக் கையாளும் வசதிகளோடு உருவாக்கப்பட்டு வருகின்றன.

மேலும் புதிய கடல் வழித்தடங்களைக் கண்டுபிடித்து கண்டங்களுக்கு மத்தியில் சரக்குப் போக்குவரத்தை அதிகப்படுத்திட சாட்டிலைட் உதவியுடன் பூமியின் அமைப்பை மிகத் துல்லியமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

ஐரோப்பாவிற்கு பொருட்களை விரைவாக எடுத்துச் செல்வதற்காக வட கிழக்கு ஆர்டிக் கடலில் ரஷ்யா வழியாக ஒரு புதிய கடல் வழியை சீனா பயன்படுத்தத் துவங்கியுள்ளது. இதுவரையிலும் சீனாவிலிருந்து ஐரோப்பா சென்ற கடல் பாதையிலிருந்து மாறி இந்தப் புதிய பாதையில் செல்வதால் 11 ஆயிரம் மைல் தூரம் குறைகிறது. இதனால் சீனத் தயாரிப்புகள் ஐரோப்பாவில் குவியப் போகிறது.

உலகின் அனைத்துப் பகுதியிலும் வியாபாரத்தைப் பெருக்க நாடுகளுக்கு மத்தியில் தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் (Free Trade Agreement), சர்வதேசப் பணப் பரிவர்த்தனைகள், கூட்டு முதலீடுகள் போன்ற சர்வதேச வியாபாரத்திற்கு வலு சேர்க்கும் வேலைகள் விரைவு படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது உலகம் முழுவதுவம் காணப்படும் சர்வதேசப் பொருளாதாரத் தேக்க நிலை (Recession) என்பது கண்மூடித்தனமான வளர்ச்சி என்ற தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் நேர்மையற்ற தன்மையின் விளைவுகளே!

தொடர்ச்சியாக பெருகி வரும் வியாபாரத்தை இந்த தற்காலிக தேக்க நிலை பெரிய அளவில் பாதிக்காது.

இந்தியாவில் பல துறைகள் கணிசமான வளர்ச்சியைப் பெற்று வருகின்றன. உணவு பதப்படுத்தல், மருந்து, எரிசக்தி, ஜவுளி போன்ற மனித வாழ்வின் அடிப்படைத் துறைகளில் அதிக முதலீடு செய்யப்பட்டு புதிய புதிய தொழிற்கூடங்கள் உருவாகி வருகின்றன.

வளர்ந்து வரும் இந்த வாய்ப்புகளை இந்தியாவின் பல சமூகங்களும் நுணுக்கமாக ஆய்வு செய்து அதற்கான ஏற்பாடுகளோடு அவற்றை தங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்கின்றன.

இந்தியாவில் சாதிய இழிவுகளால் கேவலமான அடக்குமுறைகளுக்கு ஆளான நாடார் சமூகம் காமராஜர் காலத்தில் வியாபாரத்துறையில் கூடுதல் கவனம் செலுத்தி முதலீடுகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது என்பதற்காக ”மகமை” போன்ற வருமானத்தின் ஒரு பகுதியை தங்கள் சமூக வளர்ச்சிக்குப் பயன்படுத்தினர். நாடார் சமூக சிறு, குறு, பெருந்தொழில் அதிபர்களை ஒருங்கிணைத்து ஒரு வங்கியை உருவாக்கி (Mercantile Bank) அதை வியாபாரிகளுக்கான வங்கி என்று பொதுமைப் படுத்தியுள்ளனர். நாடார்களின் வர்த்தக வெற்றிக்கு மெர்கன்டைல் வங்கி பெரிதும் உதவுகிறது.

அதேபோல மார்வாடி சமூகம் தங்கள் மக்களின் தொழில் வளர்ச்சிக்கு பல சங்கங்களை, அமைப்புகளை நடத்துகின்றனர் அவர்கள் செய்யாத தொழிலும் இல்லை. இந்தியாவில் அவர்கள் இல்லாத ஊரும் இல்லை.

அதேபோல முஸ்லிம்களில் ஒரு பிரிவினரான தாவூதி போரா சமூகத்தில் ஏழை, தொழில் இல்லாதவர் என்று ஒருவரைக் கூடக் காண இயலாத அளவிற்கு தொழிலுக்கு முதலீடு பற்றாக்குறை என்ற பேச்சே எழாத அளவில் அந்த சமூகம் தனக்கான கட்டமைப்புகளை வைத்துள்ளது. அவர்களிடையே ”ஜகாத்” முறையாகப் பங்கீடு செய்யப்படுகிறது.

புனாவைச் சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற ”மிலிந்த் காம்ப்ளே” என்ற தலித் சமூகத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ”டிக்கி” என்ற (Dalit Indian Chamber of Commerce and Industry) வர்த்தக அமைப்பை உருவாக்கி அடுத்த 10 ஆண்டுகளில் தலித் சமூக இளைஞர்களை தொழில் துறையில் ஈடுபடுத்தி குறைந்தது நூறு தலித் கோடீஸ்வரர்களை உருவாக்கும் இலக்கோடு பணியாற்றி வருகிறார்.

கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 2.5 லட்சம் கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். பல இலட்சம் புதிய தொழில் அதிபர்கள் உருவாகியுள்ளனர்.

வணிகச் சமூகம் என்று வரலாறு முழுவதும் அறியப்பட்ட முஸ்லிம் சமூகம் குறிப்பிடத்தக்க அளவிலான வளர்ச்சியைப் பெற்றுள்ளதா என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
ஹலாலான வியாபாரத்தின் மூலம் தான் எல்லையில்லா இலாபத்தை ஈட்ட முடியும். அதனால்தான் உற்பத்தியைக் காட்டிலும் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தியது நமது முந்திய தலைமுறை.

ஆனால் இன்று சேவைத் துறையின் (Service Sector) பெருக்கம், பன்னாட்டுத் தொழில் நிறுவங்களின் வருகை, வளைகுடா வேலை வாய்ப்பு ஆகியவை மாத ஊதியத்திற்கு பணியாற்றுவதை இலகுவாக்கி அதற்கு உதவும் பொறியியல் போன்ற படிப்புகளையும் கவர்ச்சியாக்கியுள்ளது.
தொழில் ரீதியாக ஒருங்கிணைய வேண்டிய தேவையும், நிர்பந்தமும் உள்ள மக்களை ஒருங்கிணைத்தாலே போதும்; மாற்றம் உருவாகும்.
பொறியியல் படிப்பை நன்றாகப் படித்தவர்களில் சிலர், பெரும் பொருள் ஈட்டுகின்றனர் என்பது உண்மை தான். ஆனால் அந்த வருமானத்திற்கும் எல்லை உண்டு. தொழில் துறையில் விரிவாக்கத்திற்கும், இலாபத்திற்கும் எல்லை இல்லை. அது இறைவனின் அருளையும் அபிவிருத்தியையும் பெற்றது.

கேரள முஸ்லிம்கள் தொடக்க காலத்தில் வளைகுடா நாட்டிற்கு அடிப்படை வேலைக்குச் சென்றாலும் கிடைத்த தொடர்புகளைப் பயன்படுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டு இன்று பெரும் தனவந்தர்களாக மாறியுள்ளனர். புதிது புதிதாக இளம் தொழில் அதிபர்கள் உருவாகி வருகின்றனர்.

தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் இளைஞர்களை தொழில் முனைவோராக (Entrepreneur) உருவாக்கும் எந்த கட்டமைப்பும் முஸ்லிம் சமூகத்தில் இதுவரை உருவாக்கப்படவில்லை. தானாக உருவாகி வருபவர்கள் மிகக் குறைவு, அப்படி உருவாகி வருபவர்களிடம் சமூக அக்கறை இருப்பது குறைவு. சமூகத்தால் உருவாக்கப்படுவோருக்குத்தான் சமூகத்துடனான தொடர்புகள் அதிகமாக இருக்கும்.

தமிழக முஸ்லிம் சமுதாயம் தொழில் துறையில் வளர்ச்சி பெறுவதற்கு மிக அடிப்படையாக ஒரு வர்த்தக அமைப்பு (Chamber of Commerce) உடனடியாக உருவாக்கப்பட வேண்டியத் தேவை உள்ளது.

இப்படிப்பட்ட சிந்தனைகளுக்கு பெரிய தொழில் செய்பவர்கள், பாரம்பர்யத் தொழில் செய்பவர்கள் முதலில் இசைவு தெரிவிப்பது கடினம். பசித்தவர்களுக்கு பழங்கஞ்சி பஞ்சாமிர்தம் என்பது போல சிறு, குறு தொழில் செய்யும் வேட்கையுடைய முஸ்லிம்களை இணைத்தாலே பின்னால் அது எல்லோரையும் இணைக்கும் பெரிய நிறுவனமாகி விடும்.
முஸ்லிம்களிடையே இதுபோன்ற வளர்ச்சிக்கான கருத்துக்கள் கூறப்படும் போது உடனடியாக “நம்மகிட்ட ஒற்றுமை இல்ல பாவா” என்று யாருக்கும் விளங்காத ஒரே ஒரு வார்த்தையைக் கூறி முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவோம். தொழில் ரீதியாக ஒருங்கிணைய வேண்டிய தேவையும், நிர்பந்தமும் உள்ள மக்களை ஒருங்கிணைத்தாலே போதும்; மாற்றம் உருவாகும்.

மிகப் பெரிய மாற்றங்களை நோக்கி உலகம் ஓடுகிறது.

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு மாநிலமான ராஸ் அல் கைமா அரசின் சார்பில் அங்கே உருவாக்கபட்டுள்ள தடையில்லா வர்த்தக மையத்தின் (RAK Free Trade Zone) அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்து - ஆங்கில நாளேட்டில் அதன் அறிவிப்பு வந்தது. ஏறக்குறைய 500 தொழில் முனைவோர் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தின் குக்கிராமத்தில் இருந்தும் ஆர்வலர்கள் வந்திருந்தனர். முஸ்லிம்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பலவிதமான தொழில் மற்றும் ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்திற்கான வாய்ப்புகளுக்கு அந்த நிகழ்வு வழிகாட்டியது. மற்றவர்களை விட நம் சமூகம் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி சாதிக்க முடியும் என்று தோன்றியது.

பயன்படுத்துவது யார் என்ற பெருமூச்சும் சேர்ந்தே வந்தது.

பணத்தை வைத்துக் கொண்டு அதைப் பாதுகாப்பதிலேயே நெஞ்சு வீங்கி வாழ்நாளை செலவிடும் மக்கள் நம்மில் அநேகம் பேர் உள்ளனர்.

அல்லாஹ் ஹலாலாக்கிய ஒன்றில் பெருமானார் செய்து சாதித்த ஒன்றில் நேர்மையான வழியில் திட்டமிடுதலோடு சிறிய முதலீடுகளை ஒன்று திரட்டி பெரும் முதலீடுகளோடு கூட்டு முயற்சியாக ஈடுபடுகின்ற போது வெற்றி நிச்சயம். இது போன்ற வாய்ப்புகளைக் கலந்து பேசுவதற்கும், ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்டுவதற்கும் தான் முஸ்லிம்களுக்கென்று வர்த்தக அமைப்பு தேவை.

- CMN சலீம்

செவ்வாய், 21 மே, 2013



அஸ்ஸலாமு அலைக்கும், அன்பார்ந்த உறவினர்களே, நண்பர்களேஇன்ஷாஅல்லா 22/05/2013இன்று தாயகம் செல்கிறேன் என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்.அனைவரும் துவா செய்யவும்.

ஹாஜா


சனி, 18 மே, 2013

சுய தொழில் தொடங்க தனி நபர் கடன் வாங்க ஒரு விழிப்புணர்வு


சுய தொழில் தொடங்க தனி நபர் கடன் வாங்க ஒரு விழிப்புணர்வு

 




அயராத உழைப்பு அசாத்திய வெற்றி




சுய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஆண்களுக்கே அதிகம் உள்ள நிலையில், இந்த துறையில் பெண்களால் பிரகாசிக்க முடியாத அளவிற்கு பல தடைகள் ஏற்படுகின்றன. ஆனால், அதனையும் தாண்டி திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர் சுயதொழில் தொடங்கி, பல பெண்களுக்கு வேலை கொடுக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.
திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் இன்பவள்ளி. 55 வயதான இன்பவள்ளி என்ற பெண் கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக சுய தொழில் ஒன்றினை தொடங்கினார். ஆரம்பத்தில் ஊறுகாய் தயாரித்து விற்பனை செய்வதையே தொழிலாக செய்து வந்தார். பின்னர் பல வகை திண்பண்டங்களை தயாரித்து தொழிலை விரிவுபடுத்தத் தொடங்கினார். ஆனால், அதற்கு அவரது குடும்பத்தினரிடமே ஆதரவு கிடைக்கவில்லை என்கிறார் இன்பவள்ளி.
வங்கிக் கடன் போன்ற வசதிகள் கிடைக்காத நிலையில் வெறும் 500 ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இன்பவள்ளியின் தொழில், இன்று 15பேருக்கு வேலை கொடுக்கும் அளவிற்கு வளர்ந்திருப்பதுதான் அவரது உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
எந்த தொழிலை மேற்கொண்டாலும் முயற்சி, அயராத உழைப்பு, தன்னம்பிக்கை, தேடல் ஆகியவை இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு நடமாடும் உதாரணம் இந்த இன்பவள்ளி.

வெள்ளி, 17 மே, 2013

As you know, we're doing mini incubator (less than 100 chicken eggs) and industrial incubator (from 24 to 33792 chicken eggs),as well as some mini plucker and industry pluckers.and Food machine etc...


Meanwhile, we'd develop a lot of new items. such as NEW JN8-48 with 132 quail eggs and 66 pigeon eggs tray.12v mini plucker and etc...
     
You're welcome to visit our blogger.
சிறிய இடத்தில் தோட்டம் அமைப்பதற்கான சில டிப்ஸ்... Updated: Friday, May 17, 
 
வீட்டிற்கு அழகு சேர்க்கும் ஒரு அங்கமாக விளங்குவது தான் தோட்டம். பெரிய வீட்டில் பார்த்தால் தோட்டத்திற்கென்று ஒரு பெரிய இடம் ஒதுக்கி, அதை பராமரிக்க தனியாக வேலையாட்களும் இருப்பர். அப்படியானால் சின்னதாக வீடு வைத்திருப்பவர்களுக்கு தோட்டம் என்பது வெறும் கனவு தானா? என்று நினைக்கலாம். அது தான் இல்லை. தோட்டம் என்றால் பெரிய இடத்தில் தான் போட முடியும் என்றில்லை. கிடைத்த சின்ன இடத்தில் கூட தோட்டத்தை உருவாக்கலாம். சிறிய இடத்தில் அமைத்த சின்ன தோட்டம் கூட பார்க்க மிகவும் அழகாக இருக்கும். ஒவ்வொருவரும் அவர்களின் இட வசதிக்கேற்ப தங்களின் தோட்டத்தை அமைத்துக் கொள்கின்றனர். அது ஜன்னலருகே இருக்கும் இடமாகட்டும் அல்லது வீட்டின் உள்ள முற்றமாகட்டும். பெரிய இடத்தில் தோட்டம் அமைப்பது என்பது ஒரு வகையில் ஒரு புதிர் தான். நடக்கும் தவறு எதனால் ஏற்படுகிறது என்ற குழப்பம் நிலவும். ஆனால் சிறிய இடத்தில் போடும் தோட்டத்தில் எந்த வகையான தவறும் நடக்க வாய்ப்பில்லை. தவறாக நட்ட செடி கூட, சிறு தோட்டத்தில் பார்க்க அழகாகத் தான் தெரியும். tips gardening small spaces அதற்கு முதலில் யோசிக்க வேண்டியது கிடைத்த சிறு இடத்தை எப்படி பயன்படுத்துவது என்பதைப் பற்றித் தான். மிகவும் சின்ன இடம் என்பதால் ஒரு மேஜையும், கொஞ்சம் நாற்காலிகளும் போடுமளவுக்குத் தான் இடம் இருக்கும். அப்படி தேவையில்லாமல் இருக்கும் சிறு இடங்களை, வீட்டினுள் இருந்து பார்க்கும் போது ஒரு ஓவியத்தைப் போல் அழகாக தெரிந்தால் எப்படி இருக்கும்? பெரும்பாலும் சிறு தோட்டம் அமைக்கும் போது சவாலான விஷயமாக இருப்பது, தோட்ட எல்லைகளின் நெருக்கம். இது பெரும்பாலும் அசிங்கமாகவே அமையும். இந்த குறையையே நிறையாக மாற்றலாம் தெரியுமா? எப்படியெனில், இந்த எல்லைகளை சுற்றி கொடிகளை படர விடலாம். தோட்டத்தில் உள்ள செடிகளின் பெரிய இலைகளுக்கு முன் இருக்கும், இந்த கொடிகளின் சிறு இலைகள் பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சி அளிக்கும். இல்லையெனில், தோட்டத்தில் உள்ள வேலிக்கு கருப்பு நிறத்தில் வர்ணம் பூசலாம். இது கேட்பதற்கு விநோதமாக இருந்தாலும், பார்க்க கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். வேண்டுமெனில், கிரீன் வால் என்ற வேலி வகையையும் அமைக்கலாம். இது கொஞ்சம் விலை உயர்ந்ததாக இருந்தாலும் செடிகள் நன்கு வளர உதவி புரியும். சரி இப்போது இணைப்பைப் பற்றி யோசிக்கலாமா? உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் மஞ்சள் நிற இலைகளைக் கொண்ட மரங்களை வளர்த்துள்ளாரா? அப்படியானால் நீங்களும் மஞ்சள் நிற இலைகளை கொண்ட செடிகளை தோட்டத்தில் வளர்த்து வரலாம். அப்படிச் செய்தால், வீட்டிற்குள் இருந்து பார்க்கும் போது உங்கள் சிறிய தோட்டம் கூட பெரியதாக தெரியும். தோட்டம் அமைக்கும் திட்டம் எளிமையாக இருக்க வேண்டும். இந்த எளிமை குறைய குறைய, சிக்கல்கள் அதிகமாகும். அழகும் குறைந்து கொண்டே போகும். தோட்டத்துக்கு தேவையான பொருட்களையும், செடிகளையும் குறைந்த அளவிலேயே தேர்ந்தேடுக்க வேண்டும். வீட்டையும், தோட்டத்தையும் இணைக்க ஒரு பாதையை உருவாக்கி, அந்த பாதையில் வீட்டில் உள்ள தரையை போலவே மரப்பாதை, சிமெண்ட் அல்லது டைல்ஸ் போட்டு அழகை கூட்டலாம். இப்படி செய்தால் இந்த இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருக்கும், மேலும் தோட்டத்து எல்லைகள் தெளிவில்லாமலும் போய்விடும். வேண்டுமானால் இந்த இடத்தை பெரிய பொருட்களால் நிரப்பி, மேலும் அழகைச் சேர்க்கலாம். உதாரணத்திற்கு, ஒரு பெரிய சிலையையோ அல்லது மேஜை நாற்காலிகளையோ போடலாம். இது இன்னும் மெருகேற்றும் வகையில் அமையும். இருப்பினும், செடிகளை கவனமாக தேர்ந்தேடுங்கள். ஏனெனில் இருப்பதிலேயே சின்ன மரம் தான் வெகு விரைவில் 6 மீட்டர் உயரமும், 4 மீட்டர் அகலத்திலும் வளரும். அதனால் பராமரிப்பது கடினமாகும். எனவே செடிகளை தேர்ந்தெடுக்கும் போது கவனம் தேவை.

ஞாயிறு, 12 மே, 2013


சுயதொழில் பயிற்சிகள்

ரூட்செட் நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவு மேம்பாட்டு பயிற்சிகளை வெவ்வேறு இடங்களில் வழங்கி வருகிறது.

ஒவ்வொரு பயிற்சிக்கும் குறைந்தபட்சம் ஒன்று அல்லது ஆறு வார கால அளவு ஆகும். இந்த பயிற்சி சுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு டெய்லரிங் தொடங்கி உணவு பதப்படுத்துதல் வரை நூற்றுக்கணக்கான சுயதொழில் பயிற்சிகள் நடத்தப்படுகிறது. இந்நிறுவனத்தில் வழங்கப்படும் பயிற்சிகள் முற்றிலும் இலவசம். பயிற்சி பெறுபவர்களுக்கு தங்கும் வசதியும் உள்ளது.
இந்நிறுவனத்தில் கற்பிக்கப்படாத பயிற்சிகளே இல்லை எனலாம். செயற்கை வைரம் பட்டை தீட்டுதல் முதல் ஆடை வடிவமைப்பு, மோட்டர் ரீவைண்டிங், தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சிகள் வரை 100 வகைப் பயிற்சிகள் இலவசமாக நடத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு: http://www.rudsetitraining.org/pages/training.html
ரூட்செட் நிறுவனம்,விமான நிலைய சாலை, காவல்நிலையம் அருகே, பெருங்குடி, மதுரை -12,
தொலைபேசி: 0452 269069, 9486369825


சுய தொழில் தொடங்க முறையான பயிற்சி

தொழில் முனைவதன் மேலாண்மைபற்றி சில கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனத்தின் (institute for entrepreneurship and career development). 

''சுய தொழில் தொடங்க முடிவு செய்பவர்கள்இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். முதலில்,சிறப்பான முறையில் திட்டமிட வேண்டும். அடுத்துஅந்தத் துறை சம்பந்தப்பட்ட நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள முறையான பயிற்சி எடுக்க வேண்டும். திட்டமிடுதலில் சிறந்து விளங்கும் நம் இளைஞர்கள்அதை மேலாண்மை செய்வதில் தான் திணறிநடைமுறைப்படுத்த முடியாமல் சோர்ந்துவிடுகின்றனர். அனுபவசாலிகளின் வழி காட்டுதல்களைக் கேட்டுத் தெரிந்துதெளிவு பெற்ற பின்னரே,திட்டமிட்ட தொழிலில் இறங்க வேண்டும். இவ்வாறு சிறப்பான திட்டமிடுதலுடன் முழுத் தெளிவு உள்ள ஒருவருக்கு வங்கிக் கடனுதவி பெறுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது.
இன்றைய இளைஞர்கள் சுய தொழில் தொடங்கத் தடையாக இருப்பவை மூன்று விஷயங்கள்தான். முதலில் பெற்றோர்கள். தங்களின் பிள்ளைகள் வேலைக்குச் செல்வதை ஊக்குவிக்கும் அளவுஅவர் கள் சுய தொழில் ஆரம்பிப்பதை ஆதரிப்பது இல்லை தமிழக பெற்றோர்கள்.'முதலீடு வேண்டுமோதன் பிள்ளையால் சமாளிக்க முடியுமோ?’ போன்ற அச்சம் தான் காரணம். அடுத்துநமது பாடத் திட்டத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு குறித்த பாடங்கள் இருப்பது இல்லை. மேலை நாடுகள்போலபள்ளி பாடத் திட்டத்திலேயே சுய தொழில் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். இறுதியாகநமது இளைஞர்களின் குறுகிய மனப்பான்மை.ஏதோ ஒரு வேலையில் சேர்ந்துமற்றவரிடம் கை கட்டி நிற்கத் துணியும் இளைஞர்கள்தொழில் துவங்கி நாமே வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று விரும்புவது இல்லை.
தொழில் முனைவர் ஆக எந்தத் தகுதியும் தேவை இல்லை. பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டவர் முதல்படித்து முடித்த முதுநிலை பட்டதாரி வரை எவரும் தொழில் முனைவர் ஆகலாம். கல்வித் தகுதியைவிட ஆர்வம்தன்னம்பிக்கை,நேர்மறை எண்ணம்எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ளும் துணிவுரிஸ்க் எடுக்கும் துணிச்சல் ஆகியவைதான் முக்கியம். பணம்கூடக் கையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பத்தாம் வகுப்பைப் பாதியில் நிறுத்திய திருபாய் அம்பானியைத் தொழில் ஆரம்பிக்கவைத்தது மேற்சொன்ன ஐந்து குணங்கள்தான்!'' என்கிறார் பாஸிட்டிவ் பார்வையுடன்!
இந்த வார்த்தைகள் எல்லாம் உங்களுக்குள் தொழில் முனையும் உந்துதலை ஏற்படுத்தியிருந்தால்... அப்புறம்என்ன... அடுத்த 'பிஸினஸ் மேக்னட்’ நீங்கதாங்க!
புதிதாகத் தொழில் துவங்குவோர்களுக்கு மத்திய அரசு வழங்கும் சேவை மற்றும் பயிற்சிகள்!
தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டங்கள்
வர்த்தகத் திறன் மேம்பாட்டுத் திட்டம்
திட்ட அறிக்கை
தொழில் சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரித்தல்
சந்தை வாய்ப்பு பற்றிய ஆய்வறிக்கை தயாரித்தல்
நேரடி கணினி வழி குறு மற்றும் சிறு தொழில்களுக்கான பதிவுகள்
மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் சலுகைகள் குறித்த தகவல்கள்
திறன் மேம்பாட்டுப் பயிற்சி
உங்களுக்காக இவை... 
நாடு முழுவதும் மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வணிகக் காப்பகங்கள் மற்றும் தொழில் முனைவோர் பூங்காக்கள் ஆகியவற்றை நாடினால்புதுமையான ஐடியாக்களுக்குப் பயிற்சி முதல் கடனுதவி வரை அனைத்தும் ஏற்பாடு செய்து தருகிறார்கள். தமிழ்நாட்டில் சென்னைகோவைசத்தியமங்கலம்திருச்சி மற்றும் தஞ்சாவூர் நகரங்களில் அமைந்துள்ள இது போன்ற அமைப்புகளின் முகவரி மற்றும் தொடர்பு எண்களுக்கு www.nstedb.com என்னும் வலைதளத்தைப் பார்க்கவும்!
அரசு கடனுதவித் திட்டங்கள் 
மத்திய அரசு 
பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக் கும் திட்டம் (PMEGP)-இந்தத் திட்டத்தின் கீழ் சேவை மற்றும் உற்பத்தித் தொழில்களுக்கு 25 லட்சம் வரை பிணையம் இல்லாமல் வங்கிகள் மூலம் கடனுதவி கிடைக்கும். 35 சதவிகிதம் மானியம் கிடைக்கும். இந்த வரம்புத் தொகைக்கு மேல் கடன் பெற விரும்புவோர் மட்டும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்!

மாநில அரசு 
வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம்-இதன் கீழ் பயன்பெற விரும்புவோரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 1.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். உற்பத்தித் தொழில்களுக்கு லட்சம் வரையிலும்சேவை சார்ந்த தொழில்களுக்கு லட்சம் வரையிலும்வியாபாரத் தொழில்களுக்கு ஒரு லட்சம் வரையிலும் வங்கிகளின் மூலம் கடன் பெறலாம். இந்த இரு திட்டங்களிலுமே அரசு சார்பில் மானியம் உண்டு. தொழில் தொடங்க உதவும் பிற நிறுவனங்கள் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO), இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி, (SIDBI) மைய அரசின் கதர் கிராமத் தொழில் நிறுவனம் (KVIC), தேசிய சிறுதொழில் நிறுவனம் (NSIC),தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC). மேலும்இது பற்றி தகவல் அறியவிண்ணப்பிக்க அந்தந்த மாவட்டத் தலைநகரங் களில் உள்ள மாவட்டத் தொழில் மையத்தை அணுகலாம்!



பிரியாணி மிக்ஸ்.. பலே லாபம்


பரபரப்பான வாழ்க்கை முறையில் பல பெண்களுக்கு ஆற அமர சமைப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. அவர்களுக்கும் பேச்லர்களுக்கும் பெரிதும் கை கொடுப்பது ரெடிமேடு மசாலா பொடி கள். அந்தவகையில் ரெடிமேடு வெஜிடேரியன் பிரியாணி மிக்ஸ், நான் வெஜிடேரியன் பிரியாணி மிக்ஸ் போன்றவற்றை தரமாக தயாரித்து விற்றால் கைநிறைய காசு பார்க்கலாம். நன்கு சமைக்க தெரிந்த பெண்கள், இந்த தொழிலில் வெற்றிக்கொடி நாட்டலாம்’ என்று கூறுகிறார் கோவை பீளமேடு பாவை மசாலா நிறுவன உரிமையாளர் சாவித்திரி (49). அவர் கூறியதாவது:

கணவர் மற்றும் மகன் ஷார்ஜாவில் பணிபுரிகின்றனர். இங்கு பெற்றோருடன் வசிக்கிறேன். வெளிநாட்டில் இருக்கும் கணவர் மற்றும் மகனுக்கு பாரம்பரிய உணவுகள் பிடிக்கும். அவற்றை சமைக்க தேவையான பொருட்கள் அங்கு கிடைக்காது. தேடிப்பிடித்து வாங்கினாலும் விலை அதிகம். எளிய முறையில் அவர்கள் சமைக்க ரெடிமேடு சாம்பார், ரசப் பொடி, பாயசம் மிக்ஸ், வெஜிடேரியன், சிக்கன், மட்டன் பிரியாணி மிக்ஸ் தயாரித்து கொடுத்து வந்தேன். கணவர், மகனின் வருமானத்தை சார்ந்து இருக்காமல் சுயமாய் சம்பாதிக்க, தொழில் துவங்க எண்ணினேன். தெரிந்ததை தொழிலாக செய்தால் எளிதில் வெற்றியடையலாம் என்பதால் முதலில் ரெடிமேடு வெஜிடேரியன் பிரியாணி, சிக்கன், மட்டன் பிரியாணி மிக்ஸ் தயாரித்து விற்றேன்.

பேச்லர்கள், குடும்ப பெண்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து பாயசம் மிக்ஸ், சாம்பார், மஞ்சள் பொடி, மல்லித்தூள், மிளகுத்தூள் தயாரித்து விற்றேன். ஒவ்வொரு முறையும் ருசி, தரம் பரிசோதித்த பின்னரே விற்க அனுப்புகிறேன். சுவை, ஆரோக்கியம், குறைந்த லாபம் ஆகியவற்றை லட்சியமாக கொண்டுள்ளதால் நிரந்தர விற்பனை உள்ளது. பெண்கள் தங்கள் சமையல் திறமையை தொழிலாக மாற்றினால் நமது பாரம்பரிய உணவுப் பழக்கம் பல தலைமுறைக் கும் தொடரும். தொழிலும் லாபகரமாக இருக்கும்.

முதலீடு: அரிசி மற்றும் தானிய மசாலா பொருட்களை கல், மண் இல்லாமல் சுத்தம் செய்ய கிளீனிங் மெஷின் ரூ.25 ஆயிரம், மசாலா பொருட்களை வறுக்க பிரையிங் மெஷின் ரூ.75 ஆயிரம். அவற்றை பொடியாக்க கிரைண்டிங் மெஷின் ரூ.20 ஆயிரம், அவற்றை பாக்கெட் போட பேக்கிங் மெஷின் ரூ.1 லட்சம் என ரூ.2.2 லட்சம் தேவை.

கட்டமைப்பு : மெஷின்கள் அமைக்க 30க்கு 20 அடி இடமும், பொருள்களை இருப்பு வைக்க ஒரு அறையும், அலுவலக தொடர்புக்கு ஒரு அறையும் போதும்.
மூலப்பொருட்கள் : சீரகசம்பா அரிசி, சேமியா, மல்லி, மிளகாய், மிளகு, மஞ்சள் மற்றும் வாசனைப்பொருள்கள். பலசரக்கு பொருள் கள் விருதுநகரிலும், வாசனைப்பொருட்கள் மதுரையிலும், மிளகு நீலகிரி, கூடலூரிலும் குறைந்த விலையில் கிடைக்கும். அவ்வப்போது நிலவும் விலை நிலவரத்துக்கேற்ப மற்ற இடங்களிலும் இந்த பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும்.

உற்பத்தி செலவு: மாதம் தலா அரை கிலோ கொண்ட 2 ஆயிரம் வெஜிடேரியன் மிக்ஸ், 2 ஆயிரம் சிக்கன், மட்டன் பிரியாணி பாக்கெட், ஆயிரம் பாயசம் மிக்ஸ் பாக்கெட்கள் மற்றும் தலா 500 கிலோ மஞ்சள் தூள், மட்டன் மசாலா, சிக்கன் மசாலா, 300 கிலோ மிளகாய் தூள் பாக்கெட்கள் தயாரிக்கலாம். இதற்கு மூலப்பொருட்கள் செலவு,6 வேலையாட்கள் சம்பளம், மின்கட்டணம், வாடகை, போக்குவரத்து உள்பட உற்பத்தி செலவுக்கு ரூ.5.7 லட்சம் தேவை.

மாதம் ரூ.85 ஆயிரம் லாபம்

மாதம் உற்பத்தியாகும் ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பொருளுக்கு, உற்பத்தியாளருக்கான லாபம் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை கிடைக்கும். இதன் மூலம் ரூ.57 ஆயிரம் முதல் ரூ.85 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். விற்பனை செய்யப்படும் பாக்கெட்கள் ஸ்டாக்கிஸ்ட்கள் மூலம், டிஸ்ட்ரிபியூட்டர்கள் வழியாக சில்லரை கடைகளுக்கு சென்றடைகிறது. 3 பேருக்கும் தலா 15 சதவீதம் லாபம் வரும் வகையில் கொடுக்கப்படுவதால் மார்க்கெட்டிங் எளிதாகிறது.

10 நிமிடத்தில் பிரியாணி தயாரிக்கலாம்

சமையல் சுத்தமாய் தெரியாதவர்கள்கூட பேச்லர் பிரியாணி மிக்ஸ் மூலம் எளிதில் 10 நிமிடத்தில் பிரியாணி தயாரிக்க முடியும். அரை கிலோ பிரியாணி மிக்ஸ் உடன் அரை கிலோ சிக்கனோ, மட்டனோ சேர்த்து ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி, மூடி 2 விசில் வந்தவுடன் இறக்கிவிடவும். இவை 10 நிமிடத்தில் முடிந்துவிடும். பின்னர் நெய் ஊற்றி கிளறினால் சுவையான பிரியாணி ரெடி. சிக்கன், மட்டனுக்கு பதில் காய்கறிகள் (கேரட், பட்டாணி, பீன்ஸ்) பயன்படுத்தினால் வெஜிடேரியன் பிரியாணி தயாராகிவிடும். ரெடிமேடு பிரியாணி மிக்ஸ் சமைப்பதற்கு எளிதாக உள்ளதால் வரவேற்பு அதிகரித்துள்ளது.

தயாரிப்பது எப்படி?

வெஜிடபிள் பிரியாணி மிக்ஸ், சிக்கன், மட்டன் பிரியாணி மிக்ஸ், பாயசம், சாம்பார் தூள், மல்லித்தூள், மிளகுத்தூள் ஆகியவை தயாரிக்கலாம். ஒவ்வொரு பொருள் தயாரிப்பதற்கும் தேவையான மூலப்பொருட்களின் அளவுகள், ஒவ்வொருவரின் கைப்பக்குவத்துக்கும், தனி முத்திரைக்கும் ஏற்றவகையில் மாற்றிக்கொள்ளலாம்.
வெஜிடபிள் பிரியாணி மிக்ஸ்: மல்லித்தூள், மிளகு, சுக்கு, பூண்டு, கிராம்பு, ஏலக்காய், லவங்கப்பட்டை, புதினா ஆகியவற்றை வறுத்து, பொடியாக்கி வெஜிடபிள் ஆயில், சீரக சம்பா அரிசியுடன் கலந்து அரை கிலோ வீதம் பாக்கெட் போட வேண்டும். 6 மாதம் வரை கெடாது. சிக்கன், மட்டன் பிரியாணி மிக்சுக்கும் இதே பொருட்கள், இதே முறை.

பாயசம் மிக்ஸ் : ஜவ்வரிசி, பால்பவுடர், முந்திரிப்பருப்பு, குங்குமப்பூ, பாதாம், பிஸ்தா பருப்பு, ஏலக்காய்  ஆகியவற்றை வறுத்து பொடியாக்கி சேமியாவுடன் கலந்து 200 கிராம் வீதம் பாக்கெட் போடலாம். 6 மாதம் வரை கெடாது.

மட்டன் மசாலா : மல்லி, மிளகாய்பொடி, சுக்கு, மிளகு, கடுகு, லவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், மஞ்சள், சீரகம், பூண்டு ஆகியவற்றை வறுத்து பொடியாக்கி 50 கிராம், 100 கிராம் வீதம் பாக்கெட் போடலாம். சிக்கன் மசாலாவுக்கு இதே பொருட்களை கூட்டிக் குறைத்து சேர்த்து தயாரிக்க வேண்டும். 

சாம்பார் பொடி: மல்லி, மிளகாய், துவரம்பருப்பு, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, கடுகு, மிளகு, சீரகம், பெருங்காயம், மஞ்சளை வறுத்து பொடியாக்கி 50 கிராம், 100 கிராம் வீதம் பாக்கெட் போடலாம்.