இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.
blogger templatesBlogger Tips and TricksFetured Content Slider
தொழில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொழில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 மார்ச், 2014

டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு!



இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் எண்ணிக்கை குறைவு.
யன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பொருட்களில் டிஷ்யூ பேப்பருக்குத் தனி இடமுண்டு. கை துடைக்க, முகம் துடைக்க என பல வகைகளில் இந்த டிஷ்யூ பேப்பர் பயன்படுகிறது. கைக்குட்டை பயன்படுத்துவதைவிட டிஷ்யூ பேப்பர் பயன்படுத்துவது எளிது என்பதால் இன்றைக்கு பலரும் தங்கள் பைகளில் டிஷ்யூ பேப்பரை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். தவிர, இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் எண்ணிக்கையும் குறைவு. எனவே, ஈடுபாட்டுடன் இந்தத் தொழிலை செய்தால் வருமானம் நிச்சயம்.
உற்பத்தி செய்வது ஒருபக்கம் என்றால், மார்க்கெட்டிங்கில் காட்டும் வேகம்தான் இந்தத் தொழிலில் ஒருவரை நிலைநிறுத்தும். இன்றைக்கு சின்ன ஹோட்டல்களில்கூட டிஷ்யூ பேப்பர்கள் பயன்படுத்துவதால், மார்க்கெட்டிங்குக்கு நிறைய அலையவேண்டி இருக்காது. சின்னச் சின்ன ஹோட்டல்கள் மொத்த வியாபாரிகளிடமிருந்தே டிஷ்யூ பேப்பர்களை வாங்குவதால், நாம் அவர்களைக் குறிவைக்கலாம். தவிர, கடைக்காரர்களின் பெயர்களை ப்ரின்ட் செய்துகொடுப்பதன் மூலமும் கவர முடியும்.
இப்போதுவரை நமது தமிழக, கேரள சந்தையை வடமாநில உற்பத்தியாளர்களே கையில் வைத்துள்ளனர். திறமையான தொழில்முனைவோர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, உள்ளூர் சந்தையைக் கைப்பற்ற உகந்தத் தொழில் இது.
திட்ட அறிக்கை! ()
இடம் : வாடகை
இயந்திரம் : 16 லட்சம்
நமது பங்கு 5%   : 80ஆயிரம்
மானியம் 25% : 4 லட்சம்  
வங்கிக் கடன் 70% : 11.20 லட்சம்
பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாநில அரசின் 'நீட்ஸ்’ திட்டம் அல்லது பொது மானியத் திட்டம் என ஏதாவது ஒன்றில் இயந்திரம் வாங்கும் தொகைக்கு மானியம் பெற வாய்ப்பு உண்டு.
இந்தத் தொழிலுக்கு நடைமுறை மூலதனமாக ஒரு மாதத்துக்கு ரூ.2.50 லட்சம் தேவைப்படும். இதற்கு தனியாக வங்கிக் கடன் கிடைக்கும்.
திட்ட அனுமானங்கள்!
மூலப்பொருள் செலவு:
தினசரி ஒரு ஷிப்டுக்கு 100 கிலோ வரைக்கும் பேப்பேர் ரோல்(18 GSM) தேவைப்படும். இதன்படி கணக்கிட்டால், மாதத்துக்கு இரண்டரை முதல் மூன்று டன் வரை பேப்பர் ரோல் தேவைப்படும். 1 கிலோ பேப்பேர் ரோல்  விலை  ரூ.60 முதல் கிடைக்கும். ப்ளைன் டிஷ்யூ பேப்பர் என்றால் கழிவு இருக்காது. ப்ரின்டிங் செய்து தருவது என்றால் சிறிதளவு கழிவு இருக்கும். ஒரு மாதத்துக்கு 25 வேலை நாட்கள் என்று கணக்கிட்டால் பேப்பர் ரோல் செலவு  (100X60X25 =  1,50,000)
விற்பனை வரவு!
பேப்பர் ரோல் உற்பத்திக்குப்பிறகு பாக்கெட் என்கிற கணக்கில் கணக்கிடப்படும். இதன்படி 1 கிலோ பேப்பர் ரோலில் உற்பத்திக்குப்பின் 12 பாக்கெட்டுகள் டிஷ்யூ பேப்பர் கிடைக்கும். ஒரு பாக்கெட் 10 ரூபாய் வரை விற்கலாம். தினசரி 100 கிலோ உற்பத்தி என்றால், ஒருநாளில் 1,200 பாக்கெட்டுகள் கிடைக்கும். அதாவது, ஒருநாளின் விற்பனை வரவு ரூ.12,000.  இதன் அடிப்படையில் மாதத்துக்கு 25 வேலைநாட்கள் என்று கணக்கிட்டால் ஒரு மாத விற்பனை வரவு (12,000X25 = 3,00,000)
செலவுகள்!
உற்பத்தி செய்யப்பட்டபின் 210 பாக்கெட்டுகளாக ஓர் அட்டைப் பெட்டியில் அடைத்து விற்பனைக்கு அனுப்பவேண்டியதுதான். இதற்கான செலவு ஓர் அட்டைப் பெட்டிக்கு ரூ.40 செலவாகும். இதன்படி ஒரு மாதத்துக்கு ஆகும் செலவு ரூ.5,680.
ப்ரின்டிங் செய்துகொடுப்பது என்றால், இரண்டு கலர் இங்க் தேவை. ஒரு கலர் 10 கிலோ ரூ.1,600. நமது ஆர்டர்களைப் பொறுத்து இதைப் பயன்படுத்தலாம். சாதாரணமாக ஏழு, எட்டு மாதங்களுக்கு இதைப் பயன்படுத்தலாம். இதன்படி கணக்கிட்டால் ஒரு மாதத்துக்கு ஆகும் இங்க் செலவு ரூ.457.      
நவீன வாழ்க்கைக்குத் தேவைப்படும் இந்த டிஷ்யூ பேப்பர் உற்பத்தியானது தன்னார்வம் கொண்ட புதிய தொழில்முனைவோர்களுக்கு நிச்சயம் கைதரும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
- நீரை.மகேந்திரன்,
படங்கள்: தி.விஜய்.
(திட்டவிவரங்கள் உதவி: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மேம்பாட்டு நிறுவனம் (MSME Development Institute), சென்னை.
மாதம் 30 ஆயிரம் வருமானம்!
''நான் ஏற்கெனவே ஒரு டிஷ்யூ பேப்பர் தயாரிக்கும் யூனிட்டில் மார்க்கெட்டிங் வேலைகளை செய்து வந்தேன். இந்தத் தொழிலுக்கு இருக்கும் வாய்ப்புகளைப் பார்த்து, நாமே இந்தத் தொழிலை ஏன் செய்யக்கூடாது என்று நினைத்து ஆரம்பித்தேன். என்னை ஊக்குவிக்கிற மாதிரி வங்கிக் கடனும் கிடைத்தது. என் நண்பர்களும் என்னை ஊக்குவித்தனர்.  
தெளிவான மார்க்கெட்டிங் திறமை இருந்தால் இந்தத் தொழிலில் வருமானம் பார்த்துவிடலாம்.  ப்ராண்டு அல்லது ஹோட்டல் பெயர்களை ப்ரின்ட் செய்துகொடுக்கும் சில்லறை விற்பனை வாய்ப்புகள் தவிர, மொத்த விற்பனையாளர்களுக்கும் சப்ளை செய்யமுடியும். தற்போது இரண்டு இயந்திரங்கள் மூலம் டிஷ்யூ பேப்பர்களைத் தயாரிக்கிறேன். தொழிலைத் தொடங்கி இரண்டு ஆண்டுகள்தான் ஆகிறது.
அடுத்ததாக, இன்னொரு இயந்திரம் வாங்கத் திட்டமிட்டுள்ளேன். திறமையான தொழிலாளர்கள், மார்க்கெட்டிங் இரண்டும் இருந்தால் லாபம் நிச்சயம். உள்ளூர் மார்க்கெட் தவிர, கேரளாவுக்கும் அதிக அளவு சப்ளை செய்கிறேன். அனைத்து செலவுகளும் போக, மாதம் சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் வருகிறது.''

வியாழன், 20 மார்ச், 2014

பேக்_தயாரிப்பு!

எல்.கே.ஜி முதல் உயர்கல்விப் படிப்பு வரை அத்தியாவசிய தேவைகளில் ஒன்று, ஸ்கூல் பேக். புத்தகங்கள், நோட்டுகள், லேப்டாப் என அனைத்துவகையான பயன்பாட்டுக்கும் ஏற்றவகையில் நல்ல, தரமான, உறுதியான பல வண்ண பைகள் தயாரிப்பதும் வருமானம் தரும் தொழில்களில் ஒன்று.

ஸ்கூல் பேக் தவிர, அன்பளிப்பு பை, பெண்களுக்கான ஹேண்ட்பேக், திருமண அன்பளிப்பு பை, டிராவல் பேக் என எல்லா இடங்களிலும் இந்தத் தொழிலுக்கான வாய்ப்புகள் பிரகாசமானது. எனவே, இந்த வாரம் இந்த பை தயாரிப்பு தொழிலுக்கான திட்ட அறிக்கை குறித்துப் பார்ப்போம்.

ஒவ்வொரு பையும் பல வண்ணங்களில், பல வடிவங்களில் இருக்க வேண்டும். டிசைனுக்கு ஏற்பவே மார்க்கெட்டில் இடம்பிடிக்க முடியும். சாதாரணமாக நைலான் ஃபேப்ரிக், ரெக்ஸின், காட்டன் துணி, கேன்வாஸ் துணி எனப் பல மெட்டீரியல்களைக் கொண்டு இந்த பைகள் தயாரிக்கப் படுகின்றன. எனினும், ரெக்ஸின் மெட்டீரியலைக்கொண்டு பைகள் தயாரிப்பது குறித்து மட்டுமே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

ரெக்ஸின் மெட்டீரியல் தவிர, ஜிப்புகள், சோல்டர் டேப், பக்கில்ஸ் போன்றவை பல நிறங்களில், பல அளவுகளில் தேவைப்படும். ஒவ்வொரு டிசைனுக்கேற்ப மெட்டீரியலை கட்டிங் செய்துகொள்ள வேண்டும்.

இதற்கேற்ப ஓர் அட்டையில் மாடல் செய்துகொண்டு கட்டிங் இயந்திரத்தின் உதவியால் மெட்டீரியலை பல பாகங்களாக வெட்டிக்கொள்ள வேண்டும். வெட்டப்பட்ட பாகங்களை இணைத்து, ஜிப் வைத்து தைத்து இணைப்புக்கொடுக்கப்படும்.

மொத்தமாகத் தைத்தபிறகு தலைகீழாக மாற்றி, அதாவது தையல்கள் அனைத்தும் உட்புறம் செல்லும்படி செய்துவிட்டால் பை தயாராகிவிடும்.

தேவையான மூலப்பொருட்கள்!

ரெக்ஸின் கேன்வாஸ், நைலான் ஃபேப்ரிக், பக்கில்ஸ், ஜிப்புகள், நூல், டேப், குறைந்தபட்சம் 10 தையல் இயந்திரம்.
திட்ட அறிக்கை! (ரூ.)
10 இயந்திரங்கள் உள்ள தயாரிப்பு தொழிற்சாலை தொடங்க...

10 இயந்திரங்கள் மற்றும்
கட்டிங் இயந்திரம் : 2.50 லட்சம்
கட்டிங் டேபிள் மற்றும்
இதர உப பொருட்கள் : 1.50 லட்சம்
நடைமுறை மூலதனம் : 6 லட்சம்
மொத்தம் : 10 லட்சம்
இந்தத் தொழில் பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் நீட்ஸ் திட்டம் இரண்டிலும் ஊக்குவிக்கப்படுகிறது. ஏதாவது ஒரு திட்டத்தில் மானியம் பெற முடியும்.
நமது மூலதனம் 5% : 0.50 லட்சம்
மானியம் 25% : 2.50 லட்சம்
வங்கிக் கடன் : 7 லட்சம்

மூலப்பொருட்கள் செலவு!

ஒரு பை தயாரிக்க ஃபேப்ரிக், ஜிப், டேப், நூல் என அனைத்தும் சேர்த்து மொத்த செலவு ரூ.230 - 240 வரை ஆகும். நாம் ரூ.240 என்று கணக்கு வைத்துக்கொள்வோம். ஒரு நாள் உற்பத்தி 150 பைகள் எனில், மாதத்துக்கு 25 வேலை நாட்களுக்கான மூலப்பொருட்கள் செலவு ரூ.9 லட்சம் (3,750ஙீ240 = 9,00,000)

விற்பனை வருமானம்!

ஒரு தையல் இயந்திரத்தின் மூலம் தினசரி 15 - 20 பைகள் வரை தயாரிக்க முடியும். நாம் 15 பைகள் என்று கணக்கு எடுத்துக்கொள்வோம். இதன் அடிப்படையில் ஒருநாள் உற்பத்தி 150 பைகள். மாதத்துக்கு 25 வேலை நாட்கள் என்று கணக்கிடும்போது மொத்தம் 3,750 பைகள் தயாரிக்க முடியும்.
பைகளின் விற்பனை விலை டிசைனைப் பொறுத்து மாறுபடும். நாம் விற்பனை விலை ரூ.300 என்று கணக்கு வைத்துக்கொள்வோம். இதன் அடிப்படையில் ஒரு மாத விற்பனை வருமானம்: 3,750ஙீ300 = 11,25,000 (நாம் 300 ரூபாய்க்கு விற்பனை செய்தாலும் சந்தை விலை ரூ.500-600 வரை இருக்கும்!).

செலவு விவரங்கள்! (ரூ.)
மின்சாரம் 5 ஹெச்.பி : 2,000
பணியாளர் சம்பளம்
மேற்பார்வையாளர் (1) : 8,000
தையல் பணியாளர்கள் : 10X6000 = 60,000
வேலையாட்கள் : 10X5000 = 50,000
விற்பனையாளர் (1) : 8000
மொத்தம் : 1,26,000
மொத்த செலவு! (ரூ)
மூலப்பொருட்கள் : 9,00,000
வாடகை : 10,000
மின்சாரம் : 2,000
சம்பளம் : 1,26,000
கடன் வட்டி (12.5) : 7,300

கடன் தவணை:

(60 மாதம்) : 11,700
இயந்திரப் பராமரிப்பு : 5,000
விற்பனை செலவு : 5,000
மேலாண்மை செலவு : 5,000
தேய்மானம் : 3000
மொத்த செலவு : 10,75,000
________
ஆக, மொத்த வரவு : 11,25,000
மொத்த செலவு : 10,75,000
________
லாபம் : 50,000
படங்கள்: தே.தீட்ஷித்
(திட்ட விவரங்கள் உதவி: ராமசாமி தேசாய், (HP:9345104264) திட்டமேலாளர், தொழில்முனைவோர் சுயவேலை மேம்பாட்டு நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி)
Selvakumar Sampath's photo.
Selvakumar Sampath's photo.
Selvakumar Sampath's photo.
Selvakumar Sampath's photo.

திங்கள், 17 மார்ச், 2014

தேங்காய் நார் கயிறு தயாரிப்பு லாபகரமான தொழிலா


''நான் அம்பானி ஆகணும், நான் அம்பானி ஆகணும்!''
- அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் நடிகர் கருணாஸ் ஒற்றைக் காலில் நின்று கொண்டு சொல்லும் வசனம் இது. அதுபோல நானும் ஒரு பெரிய தொழிலதிபர் ஆகவேண்டும் என்கிற கனவு கண்டு வருகிறவர்கள் பலர். உங்கள் கனவை நிஜமாக்க இதோ வந்துவிட்டது சூப்பர் பிஸினஸ் ஐடியாக்கள்.

ஒரு தொழிலைத் தொடங்க முதலீடு முதல் மூலப்பொருள் வரை, உற்பத்தி முதல் விநியோகம் வரை, கடன் முதல் ரிஸ்க் வரை அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய்ந்து தரவே இந்த பகுதி. வாரம் ஒரு தொழில் வீதம் இதில் சொல்லப்படும் பல்வேறு தொழில்களைப் படித்து, உங்களுக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுத்து, பயனடைந்து வருங்கால அம்பானிகளாக வாழ்த்துகள். இந்த வாரம், உங்களுக் காக தேங்காய் நாரிலிருந்து கயிறு தயார் செய்யும் பிஸினஸ்!
இந்தியாவில் தயார் செய்யப்படும் தேங்காய் நார் கயிறுகளுக்கு வெளிநாடுகளில் ஏக டிமாண்ட். நம் நாட்டில் தென்னை மரங்கள் அதிக அளவில் இருப்பதால் இந்த தொழிலுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே உலகள வில் இத்தொழிலில் இருக்கும் பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகள் நமக்கு போட்டியாக வர இப்போதைக்கு வாய்ப்பில்லை என்பதும் இன்னொரு பிளஸ் பாயின்ட்.
தென்னை மரங்கள் அதிகம் இருக்கும் இடங்களிலும், அதற்குப் பக்கத்து ஊர்களிலும் உள்ளவர்கள் இந்தத் தொழிலை உடனடியாகத் தொடங்கலாம்.
தேங்காய் நார் கயிறுகள் கட்டடங்களுக்கு சாரம் அமைக்கவும் கிணறுகளிலிருந்து தண்ணீர் இறைக்கவும் மட்டுமே முதலில் பயன்படுத்தப்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கட்டடங்களுக்கு சாரம் அமைக்க கயிறுகள் பயன்படுத்தப்படும் வழக்கம் குறைந்ததாலும், கிணறுகள் இல்லாத நிலை உருவானதாலும் இந்தத் தொழிலில் சிறிது சுணக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு தேங்காய் நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றப்பட்டு ஜியோ டெக்ஸ்டைல்ஸ், மேட்கள் போன்றவை தயார் செய்யப்பட, இந்தத் தொழிலுக்கான எதிர்காலம் பிரகாசமானதாக மாறிவிட்டது.  
யூனிட் அமைப்பு!
இந்தத் தொழிலை தொடங்க நான்கு மாதங்கள் ஆகும். ஆண்டுக்கு சுமார் 140 டன் தேங்காய் நார் கயிறு யூனிட் தொடங்க 20 சென்ட் நிலம் தேவை. சொந்தமாக இடமிருந்தால் நல்லது. அது இல்லாதவர்கள் குத்தகைக்கோ அல்லது வாடகைக்கோ எடுத்துக் கொள்ளலாம். தொழிற்சாலை, அலுவலகம், ஸ்டோர் ரூம் போன்றவைகளுக்காக 1,200 சதுர அடி ஷெட் தேவைப்படும்.  

தயாரிக்கும் முறை!
காட்டன் நூல் தயாரிப்பு போன்றே தேங்காய் நார் கயிறுகளும் தயார் செய்யப் படுகிறது. முதலில் தேங்காய் மட்டைகளை தண்ணீர்விட்டு ஊறவைத்து. இரண்டு, மூன்று மணி நேரம் கழித்து  'வில்லோயிங்’ எனப்படும் மரத்தினாலான இயந்திரத்தில் இட்டால் கழிவுகள் அகன்று நார் கிடைக்கும். அதன் பிறகு அந்த நாரை 'சில்வரிங்’  மற்றும் ஸ்பின்னிங் இயந்திரத்தில் கொடுத்து கயிறாகத் திரித்தால், விற்பனைக்கு ரெடி!
இயந்திரங்கள்!
வில்லோயிங், சில்வரிங், ஸ்பின்னிங் மற்றும் உலர வைக்கும் இயந்திரம் போன்றவை தேவைப்படும். இந்தத் தொழிலுக்குத் தேவையான அனைத்து இயந்திரங்களும் தமிழகத்திலேயே, குறிப்பாக பட்டுக்கோட்டையிலேயே கிடைக்கிறது.
மூலப்பொருள்!
தேங்காய் நார்தான் இதன் முக்கிய மூலப்பொருள். மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், கோவை  மாவட்டங்களில் தென்னை மரங்கள் அதிகளவில் இருப்பதால் அங்கிருந்து தேங்காய் மட்டையை வாங்கிக் கொள்ளலாம். தமிழகத்தில் மட்டும் 1.30 லட்சம் மெட்ரிக் டன் தேங்காய் மட்டை ஓர் ஆண்டுக்கு கிடைக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் 1.90 லட்சம் மெட்ரிக் டன் தேங்காய் மட்டை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எனவே மூலப்பொருள் கிடைப் பதில் தட்டுப்பாடு இருக்காது.  
புதிதாக யூனிட் வைக்க நினைப்பவர்களுக்கு ஓர் ஆண்டுக்கு சுமார் 130 டன் தேங்காய் மட்டை வரை தேவைப்படும்.

மின்சாரம்!
இந்த தொழிலுக்கு 6.50 ஹெச்.பி(hp) மின்சாரம் தேவைப்படும். தேங்காய் நார் கயிறு தயாரிப்பு குடிசைத் தொழிலின் கீழ் வருவதால் மின்சாரத்தை அரசு சலுகைக் கட்டணத்தில் வழங்குகிறது.
வேலையாட்கள்!
ஒரு ஷிப்ட் வேலை பார்க்க ஒன்பது திறமையான தொழிலாளர்கள் தேவை. இரண்டு ஷிப்ட் என்று வரும்போது 18 வேலையாட்கள் தேவை. மேலும் உற்பத்தி மற்றும் பராமரிப்பு வேலைகளுக்கு ஒரு சூப்பர்வைசர் தேவை. இதில் 90 சதவிகித வேலைகள் பெண் தொழிலாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. விவசாயக் கூலித் தொழிலா ளர்களை இந்தத் தொழிலில் பயன்படுத்திக் கொள்ளலாம். இயந்திரங்களை எப்படி இயக்குவது என்பதை இயந்திரங் களை சப்ளை செய்யும்      நிறுவனமே தொழிலாளர்களுக்கு ஒரு வார காலத்தில் கற்றுத் தந்துவிடும்.  
தண்ணீர்!
தினமும் 1,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். அதற்கான தண்ணீரை ஆழ்குழாய் கிணற்றின் மூலம் எடுத்துக் கொள்வது நல்லது. எனவே, நல்ல தண்ணீர் வசதி இருக்கும் இடமாகப் பார்த்து யூனிட்டை தொடங்குவது அவசியம். இந்தத் தொழில் மூலம் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆகையால் தயாரித்த பொருளை எவ்வித பிரச்னையும் இல்லாமல் சப்ளை செய்யலாம்.

மூலதனம்
முதல் வருட செயல்பாட்டு மூலதனமாக  1.71 லட்ச ரூபாய் தேவைப்படும். இது 15 நாட்களுக்கான மூலப் பொருட்கள், ஏழு நாட்களுக்கான முடிக்கப்பட்ட ஸ்டாக்குகள் மற்றும் 15 நாட்கள் விற்ற சரக்குக் கான வரவேண்டிய தொகை ஆகியவற்றை உள்ளடக்கிய தொகையாகும்.
எதிர்பாராத செலவுகள்!
எவ்வளவுதான் பட்ஜெட் போட்டு செலவு செய்தாலும் துண்டு விழவே செய்யும். அதுபோல இந்த பிஸினஸில் திடீர்  செலவுகளும் வரும். கட்டட வேலைகள், இயந்திரங்கள், மின்சாரம், அலுவலக உபகரணங்கள் மற்றும் ஃபர்னிச்சர் போன்ற விதங்களில் 5 சதவிகிதம் அதாவது சுமார் 39 ஆயிரம் ரூபாய் வரை ஏற்படக்கூடும்.    

ஆரம்ப கட்ட செலவுகள்!
மின் இணைப்பிற்கான டெபாசிட் தொகை, போக்கு வரத்து, கடன் வாங்குவதற்கு என ஆகும் செலவுகள் போன்ற வகையில் ஆறாயிரம் ரூபாய் வரை செலவாகும்.  
பிரேக் ஈவன்!
மொத்த உற்பத்தி திறனில் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது வருடங்களில் முறையே 36%, 34% 31%  என இருந்தால் இத்தொழிலில் பிரேக் ஈவன் ஏற்படும். அதற்கான உற்பத்தித்திறன் 35 டன், 34 டன் மற்றும் 33 டன் என்று இருக்க வேண்டும்.
ரிஸ்க்!
இத்தொழிலுக்குத் தேவையான மூலப்பொருளான தேங்காய் மட்டை கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படலாம். அப்போது அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை வரும். அதனால் நம் லாபம் குறையலாம். போட்டி அதிகரித்து வருவதால், பொருட்களின் விலை குறையவும் வாய்ப்புண்டு.
மார்க்கெட்டிங்!
நாம் தயார் செய்யும் தேங்காய் நார் கயிறை கேரளாவில் இருக்கும் தேங்காய் நார் பொருட்கள் தயாரிப்பு யூனிட்களுக்கு விற்பனை செய்யலாம். தவிர, தமிழ்நாட்டில் சேலம், பொள்ளாச்சி, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் தேங்காய் நார் கயிறுகளை வாங்க நிறைய வியாபாரிகள் இருக்கின்றனர்.
ஏற்றுமதியிலும் கலக்கலாம்!
மண் அரிப்பைத் தடுக்கும் வலைகள் மற்றும் பழத் தோட்டங்களில் கொடிகள் படர்வதற்கும் பயன்படுகிறது. இந்த தயாரிப்புகள் அனைத்தும் ஏற்றுமதி சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. உலகளவில் 3,50,000 டன்கள் ஜியோ- டெக்ஸ்டைலுக்கான சந்தை இருக்கிறது. ஜியோ டெக்ஸ்டைல்ஸ் தயாரிப்பில் 98% சிந்தெடிக் மெட்டீரியல் மூலம் தயாரித்த பொருட்களுக்கு பதில் தேங்காய் நார் மூலம் தயாரிப்பது தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் உலகளவில் இந்த பொருளுக்கான தேவை கணிசமாக அதிகரித்திருக்கிறது.
பெரும்பாலும் வளர்ந்த நாடுகளில் இந்தத் தொழில் கிடையாது என்பதோடு அங்கு ஆரம்பித்தால் அதிக செலவு ஏற்படும் என்பது நமக்கிருக்கும் கூடுதல் பலம். எதிர்காலத்தில் பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா நாடுகளில் இந்தத் தொழில் தொடங்கப்பட்டாலும் நமக்கு அதிகம் பாதிப்பிருக்காது.  
ஃபைனான்ஸ்!
மொத்த மூலதனத்தில் 5 சதவிகிதத்தை கையிலிருந்து போட வேண்டும். அந்த வகையில் இந்தத் தொழில் தொடங்குபவர் சுமார் 58,000 ரூபாய்வரை முதலீடு செய்ய வேண்டியிருக்கும். மூன்று லட்ச ரூபாய், அதாவது 30% வரை காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் (ரிக்ஷிமிசி) மூலம் மானியம் கிடைக்கும். 10 லட்சத்துக்கு மேல் 25 லட்சத்துக்குள் எனில் 10% மானியம் கிடைக்கும். இந்த மானியத் தொகையானது வங்கியில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும். இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்த மானியத் தொகை வங்கியில் வாங்கிய கடனுக்கு வரவாக டெபாசிட் செய்யப்படும். மானியத்தை வங்கியில் டெபாசிட் செய்திருக்கும் காலகட்டத்தில் அதற்கு நிகரான கடன் தொகைக்கு வட்டி பிடிக்கப்பட மாட்டாது. 65% வரை அதாவது 6.50 லட்சத்துக்கு மட்டும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்க வேண்டியதிருக்கும்.
நிகர லாபம்
மொத்த விற்பனையில் 15-20% வரை லாபம் கிடைக்கும்.
-பானுமதி அருணாசலம்
படங்கள் :  வெ.பாலாஜி

ஹாலோ பிளாக் விற்பனையில் 15% லாபம்



விற்பனையில் 15% லாபம்
''வீட்டை கட்டிப்பார்; கல்யாணத்தை பண்ணிப்பார்' என்பார்கள்... அப்போதுதான் வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களைப் புரிந்துகொள்ள முடியும் என்பதற்காக! ஆனால், இப்போதெல்லாம் ஒரு கல்யாணத்தைகூட எளிதாக நடத்தி விடலாம், ஆனால்  வீடு கட்டுவது என்பது சாதாரண விஷயமில்லை! பக்காவாக திட்டமிட்டு வேலையைத் தொடங்கினால் அப்போதுதான் சிமென்ட் விலை ஏறிவிட்டது, கம்பி விலை ஏறிவிட்டது, மணல் விலை ஏறி விட்டது என்பார்கள்.
இந்த கட்டுமான பொருட்களின் விலையேற்றத் தைக் கட்டுப்படுத்த எந்த கட்டுப்பாடும் இல்லை. அதிலும் செங்கல் விலை சொல்லவே வேண்டாம். ஏரியாவுக்கு ஏரியா விலை வித்தியாசம் எகிறுகிறது. எந்த டைப் வீடு கட்டினாலும் செங்கல் இல்லாமல் காரியம் நடக்காது. அந்த அளவுக்கு அதன் தேவை இருக்கிறது. பழைய பாணியில் எல்லா பணிகளுக்கும் செங்கல்லை மட்டுமே ஏன் நம்பியிருக்க வேண்டும்? வேலையை இன்னும் சுலபமாக்க வேறு தொழில்நுட்பத்தைப் புகுத்தினா லென்ன என்ற முயற்சியில் வந்தது தான் இந்த 'ஹாலோ பிளாக்’. செங்கல்லைவிட லேசானதாலும், சிமென்ட் பயன்பாட்டை குறைப்பதாலும் கட்டுமானத் தொழில் உலகில் இப்போது நீங்காத இடம்பிடித்து விட்டது இந்த ஹாலோ பிளாக்.  
ஒரேஒரு ஹாலோ பிளாக் நான்கு செங்கல்லுக்கு ஈடாக தேவையைப் பூர்த்திசெய்து விடுகிறது. வேலையும் சுலபம். இதனால் விறுவிறுவென கட்டட வேலைகள் முடிந்து விடுவதால் கட்டுமானத் துறையில் இதன் தேவை தற்போது அதிகரித்துள்ளது.  காம்பவுன்ட் சுவர், ஆர்ச்சுகள் போன்றவற்றைக் கட்டுவதற்கு அதிகளவில் இதைப் பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமல்லாமல் செலவும் கைகளுக்குள் அடங்கி விடுகிறது.
ஆர்.சி.சி, ஜி.ஐ. ஷீட்ஸ், ஏ.சி.சி. ஷீட்ஸ் போன்ற ரூஃபிங்கிற்கு சப்போர்ட்டாகவும் செங்கல், கற்கள் போன்றவைகளுக்கு மாற்றாகவும்  ஹாலோ பிளாக் இடம் பிடித்து விட்டதால் நாளுக்குநாள் இதன் தேவை அதிகரிக்கவே செய்யும். உத்தரவாதமான நல்ல வருமானம் தரக்கூடிய தொழில் என்பதால் துணிந்து இறங்கலாம். கட்டுமானத் தொழில் வளர வளர, இந்தத் தொழிலுக்கும் ஏறுமுகம்தான்.

தயாரிக்கும் முறை  கருங்கல் குவாரியிலிருந்து வெளியேறும் மணல்துகள்கள், அவல் ஜல்லி, சிமென்ட் போன்றவைகள் தான் முக்கிய மூலப் பொருட்கள். எல்லாவற்றையும் தகுந்த விகிதத்தில் கலவையாக்கி லேசான ஈரப்பதத்தோடு இதற்கென்றே உள்ள ஹைட்ராலிக் ஆபரேட்டிங் இயந்திரத்தில் கொட்டி இயந்திரத்தை இயக்கினால் நிமிடத்தில் ஹாலோ பிளாக் ரெடி!   அதிக பலமிக்க ஹாலோ பிளாக் வேண்டுமெனில் சிமென்ட், மணல், அவல் ஜல்லி போன்றவைகளை 1:3:6 என்கிற விகிதத்தில் கலக்க வேண்டும். இதுவே சாதாரணமான கட்டடங்களுக்கு எனில் 1:5:8 என்கிற விகிதத்தில் இருப்பதுபோல பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர், சிமென்ட் கலவை 0.4:1 என்கிற விகிதத்தில் இருக்க வேண்டும்.


ஃபைனான்ஸ்
சொந்த இடம் இருந்தால் நல்லது. இல்லையென்றால் வாடகைக்கு எடுத் தும் செய்யலாம். இடமிருந்து, சொந்தமாக கட்டடம் கட்டும்பட்சத்தில் அந்த வகைக்கு சுமார் ஆறு லட்சம் ரூபாய் வரை செலவாகும். அத்துடன் பிளான்ட் மற்றும் இயந்திரத்திற்கு மூன்று லட்சம் ரூபாயும், செயல் பாட்டு மூலதனத்துக்கு ஒரு லட்சம் ரூபாயும் என மொத்தம் பத்து லட்சம் ரூபாய் வரை ஆகும்.
மூலதனம்  
இந்த தொழி லைத் துவங்க நினைக்கும் ஒருவர் தனது கையிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் வரை மூலதனமாக போட வேண்டியது வரும். மீதமுள்ள ஒன்பதரை லட்ச ரூபாயை வங்கியிலிருந்து கடனாகப் பெற்றுக் கொள்ளலாம்.

மானியம்
பிரதம மந்திரி வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த தொழில் வருவதால் மூன்றரை லட்சம் ரூபாய் வரை மானியம் பெறமுடியும். மானியத் தொகையானது இந்த தொழிலுக்காக வாங்கிய கடன் கணக்கில் வரவு வைக்கப்படும். மூன்று வருடத்திற்குப் பிறகு நான்காவது ஆண்டின் தொடக் கத்திலிருந்து கடன் தொகை ஆறு லட்சம் பிடித்தம் செய்யப்படும்.

ஆட்கள்
முழு உற்பத்தி திறனில் வேலை பார்க்க பத்து நபர்கள் தேவைப்படு வார்கள். நல்ல ஈடுபாட்டுடன் வேலைபார்க்கும் ஒன்பது பேரும், விற்பனை மற்றும் கலெக்ஷன் நிர்வாகம் செய்வதற்கு ஒருவரும் போதுமானது.


இயந்திரம்
இந்த  ஹைட்ராலிக் ஆபரேட்டிங் இயந்திரம் தமிழ்நாட்டிலேயே கிடைக்கிறது. கோவை, உடுமலைப்பேட்டை பகுதிகளில் வாங்கலாம்.

வார்ப்பு அளவுகள்
கற்கள் மூன்று அளவுகளில் உள்ளன.
4 இஞ்ச், 6 இஞ்ச்,  8 இஞ்ச் என்ற அளவுகளில் இருக்கின்றன.
4 இஞ்ச் கற்கள் பாத்ரூம் கட்டுவதற்குப் பயன்படுகிறது. (இதன் நீளம் 15 இஞ்ச், அகலம் 4 இஞ்ச், உயரம் 8 இஞ்ச்)
6 இஞ்ச் கற்கள் ஓட்டு வீடு கட்டப் பயன்படுகிறது. இதற்கு அகலம் மட்டும் வேறுபடும் (அகலம் 6 இஞ்ச்)
8 இஞ்ச் கற்கள் மாடி வீடு கட்டப் பயன்படுகிறது. இதற்கு அகலம் மட்டும் வேறுபடும் (அகலம் 8 இஞ்ச்)

சாதகமான விஷயம்
சாதாரணமாக மழைக் காலங்களில் செங்கல்  தயாரிக்க முடியாது.  காய வைப்பதற்கேற்ப வெயில் இருக்காது என்பதால் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் செங்கல் தொழில் அடியோடு பாதிக்கப்படும். ஆனால்,  ஹாலோ பிளாக் தொழிலில் அப்படியான கவலை இல்லை. மழைக் காலங்களில்கூட தயார் செய்ய முடியும். இயந்திரத்திலிருந்து எடுத்த அரை மணி நேரத்திற்குள் இந்த கற்கள் காய்ந்து விடுவதால் மழைக்காலம் என்றாலும் பாதிப்புகள் ஏற்படாது.

ரிஸ்க்
தொடர்ச்சி யான மின்சாரம் தான் இதன் முக்கிய தேவை. மின்தட்டுப்பாடுதான் இந்த தொழிலை வளரவிடாமல் தடுக்கும் முக்கியமான விஷயமாகும். மின்சாரம் தொடர்ச்சியாகக் கிடைத்தால் நல்ல லாபம்தான்.
-பானுமதி அருணாசலம்
படங்கள்:  பா.காளிமுத்து
குடும்பத் தொழிலாகவே செய்து வருகிறோம்
காரைக்குடி அமராவதிபுதூரில் உள்ள 'உமையாம்பிகை ஹாலோ பிளாக் தயாரிப்பு யூனிட்’ உரிமையாளரான பார்வதி தன்னுடைய தொழில் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
கட்டட கான்ட்ராக்டர்களே இடம் தேடிவந்து ஆர்டர் கொடுத்து விடுவார்கள். அதற்கேற்ப சப்ளை செய்வோம். சில நேரங்களில் அவர்களே வாங்கிச் செல்வதும் உண்டு. மூலப் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்துவிடுவதும் இதன் கூடுதல் சிறப்பு.  அச்சு வார்ப்புகளுக்கு ஏற்பதான் கற்கள் வரும். கவனமாக எடுத்துச் சென்று வெயிலில் காய வைக்க வேண்டியதுதான் நமது முக்கியமான வேலையே. விற்பனையைத் தனியாக கவனித்துக் கொள்கிறோம்.
சாதாரணமாக 4,000 கற்கள் தயாரிக்க தேவைப்படும் தொகை:
அவல் ஜல்லி ஒரு லோடு (3 யூனிட்) - 6,500 ரூபாய்
50 மூட்டை சிமென்ட் - (மூட்டைக்கு 280 வீதம்) - 14,000 ரூபாய்.
கிரஷர் மண் ஒரு லோடு- (3 யூனிட்) - 3,500 ரூபாய்.
மொத்தம் 24,000 ரூபாய்வரை செலவாகிறது.
ஒரு ஹாலோ பிளாக் 9.50 முதல் 20 ரூபாய் வரை விலைபோவதால் 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.  இயந்திரம் மூலம் மட்டுமின்றி சாதாரணமாக கைகளாலும் தயாரிக்க முடியும். இருந்தாலும் இயந்திரத்தை  உபயோகித்தால் உற்பத்தியின் அளவு அதிகரிக்கும், நேரம் குறையும், நமக்கும் நல்ல லாபம்தான். 80,000 ரூபாய் விலையில் இந்த இயந்திரம் கிடைக்கிறது.
இந்த தொழிலுக்கே உள்ள சிரமம் என்னவென்றால் கற்கள் மேடைக்கு வந்தவுடன் அதனை இழுப்பதுதான். கொஞ்சம் கடினமாக இருக்கும் அதை இழுப்பதற்கு குறைந்தபட்சம் நான்கு பேராவது தேவைப்படுவார்கள். எங்களைப் பொறுத்தவரை இதை குடும்பத் தொழிலாகவே செய்து வருகிறோம்,  அதனால் அதிக லாபம் பார்க்கிறோம். சம்பளத்திற்கு ஆள் வைத்து பார்த்தால் இவ்வளவு லாபம் பார்க்க முடியாது என்றார் பார்வதி.
- ச. ஸ்ரீராம்

ஃபிளை ஆஷ் பிரிக்ஸ்! டேர்ன் ஓவரில் 10% லாபம்!


ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ்

செங்கல்லுக்கு மாற்றாக புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த தொடங்கியதன் முதல்படி ஹாலோ பிளாக் என்றால், அதன் அடுத்த கட்டமாக வந்த தொழில்நுட்பம்தான் ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ். ஹாலோ பிளாக்ஸ் தயாரிப்பு, தொழில்நுட்பம் பற்றி கடந்த வாரம் அலசியதற்கு வந்த வரவேற்பைத் தொடர்ந்து அதன் தொடர்ச்சியாகவே இந்த வாரம் ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ்.
புதிய தொழில்நுட்பத்தில் நவீனமான முறையில் தயாரிக்கப்படுவதாலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த நண்பனாக இருப்பதாலும், கட்டுமானத்துறையில் இப்போது ஃப்ளை ஆஷ் அதிக அளவில்  பயன்படுத்தப்படுகிறது. தயாரிப்புச் செலவு அதிகம் என்றாலும், செங்கல்லின் தேவை தவிர்க்க முடியாதது என்பதால் இந்தத் தொழிலில் துணிந்து இறங்கலாம். அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் நிலக்கரி சாம்பல்தான் முக்கிய மூலப் பொருள். 'சிமென்ட் செங்கல்’, 'சிமென்ட் கல்’ எனவும் அழைக்கப்படுகிற இந்த ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ், செங்கல்லை விடவும் நீடித்து உழைக்கும். மற்றும் சீக்கிரத்தில் உடையாது. இந்த தன்மைகளால் கட்டட வேலைகளில் பெரிதும் நம்பகத் தன்மையை அடைந்து விட்டது.
ஆண்டுக்கு 90 மில்லியன் டன் ஃப்ளை ஆஷ் இந்தியாவின் அனல் மின் நிலையங்களிலிருந்து கிடைக்கிறது. வரும் ஆண்டுகளில்  இன்னும் அதிகளவில் இந்த நிலக்கரி சாம்பல் கிடைக்கும் எனவும் தெரிவிக்கின்றனர். பொது வாக நமது நாட்டில் மின்சாரத் தேவையை 70% அளவுக்கு அனல்மின் நிலையங்களே பூர்த்தி செய்வதால், இந்த கற்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருளுக்கு தட்டுப்பாடு வராது என்று நம்பலாம். குறிப்பாக  தமிழ்நாட்டில் நெய்வேலி, மேட்டூர், தூத்துக்குடி, எண்ணூர், மற்றும் வடசென்னை அனல்மின் நிலையங்களிலிருந்து எளிதாகக் கிடைத்து விடுவதால் இதன் அருகில் இருக்கும் ஊர்களில் இருப்பவர்களுக்கு இந்த தொழில் செய்வது கூடுதல் வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
பயன்பாடுகள்
இந்த ஃப்ளை ஆஷ் கற்களைக் கொண்டு கட்டப்படும் கட்டடங்கள் நல்ல உறுதியாக இருப்பது முக்கியமான விஷயம். இதன் வடிவம் மற்றும் அளவு கட்டட வேலைகளை சுலபமாக்குகிறது. தண்ணீர் கசிவின்மை,   வலிமை, நெகிழ்வுத்தன்மை போன்ற கான்கிரீட்டை உறுதிப்படுத்தும் பண்புகள் இந்த கற்களில் இருப்பதால் கட்டட பொறியாளர்களின் முதன்மை தேர்வாக இது இருக்கிறது.
தயாரிக்கும் முறை
நிலக்கரி சாம்பல் 70%, மணல் 15%, சுண்ணாம்புகல்  10% மற்றும் ஜிப்சம் 5% ஆகிய மூலப்பொருட்களை சரியான விகிதத்தில் சேர்க்க வேண்டும்.  8-10% என்கிற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து இந்த கலவையை ஹைட்ராலிக் இயந்திரத்தில் கொட்டி இயந்திரத்தை இயக்கினால் ஃப்ளை ஆஷ் செங்கல் கிடைத்துவிடும். ஹாலோ பிளாக் தயாரிப்பு முறைதான் இதற்கும் என்றாலும், இதனை 48 மணி நேரத்திற்கு வெயிலில் காய வைக்க வேண்டும். அதன்பிறகு இந்த கற்கள் மீது  தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் ஊற்றும்போதுதான் கற்கள் கூடுதல் அடர்த்தியாகும்.

இயந்திரங்கள்
மெக்கானிக்கல்,  ஹைட்ராலிக் மற்றும் ஸ்டேஷனரி போன்ற இயந்திரங்கள் இதில் பயன் படுத்தப்படுகிறது. இந்த மூன்றும் வெவ்வேறு வகையான அளவுகளில் கற்களை தயாரித்து தருகின்றன. எனவே வசதிக்கு தகுந்தாற்போல், உற்பத்தி திறனுக்கு ஏற்ற வகையில் இயந்திரத்தை வாங்கிக் கொள்ளலாம். இந்த இயந்திரங்கள் கோயம்புத்தூரில் மட்டுமே கிடைக்கிறது.
ஆட்கள்
ஒரு யூனிட்டுக்கு 20 பணியாளர்கள் வரை தேவைப்படுவார்கள்.

சந்தை வாய்ப்பு
சாதாரண செங்கலுக்கு பதில் தற்போது நவீன தொழில்நுட்பத் தில் தயாரிக்கப்படும் இந்த ஃப்ளை ஆஷ் எனும் சிமென்ட் செங்கல் கட்டுமானத் துறையில் அதிகளவில் பயன்படுத்துகிறார் கள்.  எனவே இதற்கான சந்தை வாய்ப்பு அதிகளவில் இருக்கிறது. கமிஷனுக்கு வாங்கிச் செல்லும் ஏஜென்டுகள், கட்டட பில்டர்கள், கான்ட்ராக்டர்கள் மற்றும் நேரடி வாடிக்கையாளர்கள்.
ஃபைனான்ஸ்
சொந்த இடமாக இருந்தால் உற்பத்திச் செலவு குறையும்.  கட்டடம் மற்றும் சிவில் வேலைகளுக்கு நான்கு லட்சம் ரூபாய் வரை செலவாகும். அத்துடன் பிளான்ட் மற்றும் இயந்திரத்திற்கு பதினாறு லட்சம் ரூபாய், செயல்பாட்டு மூலதனம் ஐந்து லட்சம் ரூபாய் என மொத்தம் இருபத்தைந்து லட்சம் ரூபாய் வரை ஆகும்.

மூலதனம்  
நிறுவனர் ஐந்து சதவிகித மூலதனமாக 1.25 லட்சம் ரூபாய் வரை போட வேண்டியது வரும். மீதமுள்ள 95% அதாவது 23.75 லட்சம் ரூபாய் வங்கியிலிருந்து கடனாக பெற்றுக் கொள்ளலாம்.
மானியம்  
இந்த தொழில் பிரதம மந்திரி வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் வருவதால் 8.75 லட்சம் ரூபாய் வரை மானியம் பெறமுடியும். மானியத் தொகையானது இந்த தொழிலுக்காக வாங்கிய கடன் கணக்கில் மூன்று வருடத்திற்குப் பிறகுதான் வரவு வைக்கப்படும்.  
சாதகம்
இந்த தொழிலுக்கு தேவையான முக்கிய மூலப் பொருளான நிலக்கரி சாம்பல் கிடைப்பதில் முன்பு சிக்கல் இருந்து வந்தது. அனல் மின் நிலைய உலையில் இருந்து 20% நிலக்கரி சாம்பல்களை இனி ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் உரிமையாளர்களுக்கு கண்டிப்பாக தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே இனி மூலப் பொருள் கிடைப்பதில் சிக்கல் இருக்காது என்பது இந்த தொழிலுக்கு சாதகமாக இருக்கிறது.
பாதகம்
இயந்திரத்திலிருந்து செங்கல் வந்ததும் காயவைத்த பின்பு தண்ணீர் ஊற்றி கல்லை கடினப் படுத்த வேண்டும். இந்த வேலை மழைக்காலத்தில் சுலபமாகிறது. மிதமான மழையினால் இந்த தொழிலில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆனால் பலத்த மழை எனில் கொஞ்சம் தொய்வு ஏற்படும்.
-பானுமதி அருணாசலம்
படங்கள் : வெ. பாலாஜி
''பிரகாசமான தொழில் என்பதில் சந்தேகம் இல்லை!!'
ந்த தொழிலின் வெற்றிகரமாக ஈடுபட்டுவரும் கோவை  சின்னவேடம் பட்டி 'சக்தி பிரிக்ஸ்’ உரிமையாளர் சசிதரனின் அனுபவங்கள்:
''சாதாரண செங்கல்கள் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருப்பதால் தற்பொழுது ஃப்ளை ஆஷ் பிரிக்ஸை வாங்க பல கட்டுமான பொறியாளர்கள் தேடி வருகிறார்கள். தண்ணீரைக் குறைவாக உறிஞ்சுகிறது, அதிக எடையைத் தாங்கக்கூடியது  என்பதால் இரண்டு மாடிக்குமேல் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு இனி ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் வைத்துதான்  கட்ட வேண்டும்  என அரசாங்கம் அறிவித்திருப்பதும்,  இந்தியாவில் கட்டுமானத் துறை வளர்ந்து வருவதும் இந்த தொழிலுக்கு மிகவும் சாதகமான அம்சமாக இருக்கிறது. 1.5 ஏக்கர் அளவு நிலமும், 50 ஹெச்.பி. மின்சாரமும் வேண்டும்.
மெக்கானிக்கல் மெஷின், ஹைட்ராலிக் மெஷின் மற்றும் ஸ்டேஷனரி மெஷின்ஸ் என மூன்றுவிதமான இயந்திரங்களை இதில் பயன்படுத்துகிறோம். எட்டு மணி நேர வேலையில்  மெக்கானிக்கல் மெஷின் 7,500 கற்களையும், ஹைட்ராலிக் மெஷின் 8,500 கற்களையும், ஸ்டேஷனரி மெஷின்ஸ் 20,000 கற்களையும் தயாரிக்கும். ஒரு கல்லுக்கு எவ்வளவு லாபம் என்று  கணக்கிடுவதைவிட வருட டேர்ன் ஓவரில் எவ்வளவு லாபம் என்று பார்க்க வேண்டும். ஸ்டேஷனரி மெஷின்ஸ் உபயோகப்படுத்தும் பட்சத்தில் இரண்டு கோடி வரை டேர்ன் ஓவர் வரும். இப்போது சப்ளையைவிட டிமாண்ட்தான்  அதிகம். எதிர்காலத்திலும் டிமாண்ட் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. சரியான வழிகாட்டுதலுடன், தரமான இயந்திரங்களை வாங்கிப்போட்டு செய்தால் இது மிகச்சிறந்த லாபகரமான தொழிலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை'' என்றார் சசிதரன்.
-பா. விஜயசந்தர்