இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.
blogger templatesBlogger Tips and TricksFetured Content Slider

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

சர்வதேச ஜவுளி இயந்திரங்களின் கண்காட்சி தொடங்க உள்ளது.

சீனாவின் ஷாங்காய் நகரில், வரும் ஜூன் 16-ஆம் தேதி சர்வதேச ஜவுளி இயந்திரங்களின் கண்காட்சி தொடங்க உள்ளது.
இதுதொடர்பாக சீன ஜவுளி இயந்திர உற்பத்தியாளர் சங்கத்தின் விற்பனைப் பிரிவைச் சேர்ந்த காங் ஜெங், ஃபால்கன் எக்ஸிபிட்டர்ஸ் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி சூரஜ் தவன் ஆகியோர் கோவை செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
சீனாவின் ஷாங்காய் நகரில் நான்காவது முறையாக ஜவுளி இயந்திரங்களின் கண்காட்சி இவ்வாண்டு ஜூன் 16-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. புதிய சர்வதேச கண்காட்சி மையத்தில் இக்கண்காட்சி நடக்க உள்ளது. 26 நாடுகளைச் சேர்ந்த 1,500-க்கு மேற்பட்ட நிறுவனங்கள் சுமார் 1.5 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் தங்கள் ஜவுளி இயந்திரங்களை காட்சிக்கு வைக்க உள்ளன.
இக்கண்காட்சியில் ஜவுளித் துறையின் நவீன தொழில்நுட்ப மேம்பாட்டு இயந்திரங்கள் இடம்பெற உள்ளன. இந்தியாவில் ஜவுளி இயந்திர உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் கோவை லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் உள்ளிட்ட, உலகம் முழுவதும் ஜவுளி இயந்திர உற்பத்தியில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் கண்காட்சியில் கலந்துகொள்கின்றன. 100 நாடுகளைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கண்காட்சியைப் பார்வையிட வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பின்னிங், டையிங், ஃபினிஷிங், நிட்டிங், ஹொசைரி, வீவிங், டெஸ்டிங், சாயப் பொருள்கள், ரசாயனம், மென்பொருள், நான்-ஓவன்ஸ், எம்பிராய்டரி, கார்மென்ட் தயாரிப்பு தொடர்பான இயந்திரங்கள் கண்காட்சியில் அதிக அளவில் இடம்பெற உள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.
சீனாவின் ஷாங்காய் நகரில், வரும் ஜூன் 16-ஆம் தேதி சர்வதேச ஜவுளி இயந்திரங்களின் கண்காட்சி தொடங்க உள்ளது.
இதுதொடர்பாக சீன ஜவுளி இயந்திர உற்பத்தியாளர் சங்கத்தின் விற்பனைப் பிரிவைச் சேர்ந்த காங் ஜெங், ஃபால்கன் எக்ஸிபிட்டர்ஸ் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி சூரஜ் தவன் ஆகியோர் கோவை செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
சீனாவின் ஷாங்காய் நகரில் நான்காவது முறையாக ஜவுளி இயந்திரங்களின் கண்காட்சி இவ்வாண்டு ஜூன் 16-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. புதிய சர்வதேச கண்காட்சி மையத்தில் இக்கண்காட்சி நடக்க உள்ளது. 26 நாடுகளைச் சேர்ந்த 1,500-க்கு மேற்பட்ட நிறுவனங்கள் சுமார் 1.5 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் தங்கள் ஜவுளி இயந்திரங்களை காட்சிக்கு வைக்க உள்ளன.
இக்கண்காட்சியில் ஜவுளித் துறையின் நவீன தொழில்நுட்ப மேம்பாட்டு இயந்திரங்கள் இடம்பெற உள்ளன. இந்தியாவில் ஜவுளி இயந்திர உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் கோவை லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் உள்ளிட்ட, உலகம் முழுவதும் ஜவுளி இயந்திர உற்பத்தியில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் கண்காட்சியில் கலந்துகொள்கின்றன. 100 நாடுகளைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கண்காட்சியைப் பார்வையிட வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பின்னிங், டையிங், ஃபினிஷிங், நிட்டிங், ஹொசைரி, வீவிங், டெஸ்டிங், சாயப் பொருள்கள், ரசாயனம், மென்பொருள், நான்-ஓவன்ஸ், எம்பிராய்டரி, கார்மென்ட் தயாரிப்பு தொடர்பான இயந்திரங்கள் கண்காட்சியில் அதிக அளவில் இடம்பெற உள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக